செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Oct 01, 2023 03:04:20 PM

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த அம்மச்சியாபுரம் ஊராட்சியில் சாலையை தரமாக அமைக்கச் சொன்ன ஊர்மக்களை , ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சாலையை தரமாக போடச்சொன்னதற்காக, சாலைப்பணியை நிறுத்திவிடுவோம் என்று ஒப்பந்ததாரருடன் சேர்ந்து மக்களை அடாவடி பேச்சுக்கள் மூலம் மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவர்..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் ஊராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சேதம் அடைந்த சாலைகளை புதுப்பிப்பதற்காக 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாய்க்காம்பட்டி முதல் திருமலாபுரம் விளக்கு வரை தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

தரமற்ற முறையில் நடந்த சாலைப்பணியை தடுத்து நிறுத்திய அப்பகுதியை சேர்ந்த மக்கள், தார்ச்சாலை போடும் பணியை மேற்கொண்டவர்களிடம் , தங்கள் பகுதிக்கு ஒரு இன்ச் கூடுதலாக சாலை அமைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

25 மில்லி மீட்டர் தான் போடுவோம் என்ற ஒப்பந்ததாரர் , மக்கள் வீடியோ எடுத்ததால் பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒரு இன்ச் சேர்த்து தார்ச்சாலை அமைத்துக் கொடுத்தார். ஒப்பந்ததாரரின் அழைப்பின் பேரில் அங்கு வந்த அமச்சியாபுரம் ஊராட்சித் தலைவர் பஞ்சமணி சாலை பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்து சாலை பணிகளை தடுத்தது யார் ? என்று பொதுமக்களை ஒருமையில் பேசி அடாவடி செய்தார்.

பொதுமக்கள் கேட்டுக் கொண்டதால் சாலை சரியாக போடப்பட்டதாக ஒரு பெண் கூறிய நிலையில், அந்தப்பெண்ணை ஆபாசமாக பேசி அறுத்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார் பஞ்சமணி.

ஊர் மக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்படும் சாலைப்பணி தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கூற கூடாதா ? என்று ஊர் மக்கள் எதிர் கேள்வி எழுப்பினர். அனைவரும் வீடியோ எடுப்பதை கண்டதும், ஊராட்சி மன்றத் தலைவர் பஞ்சமணி பம்மியபடியே அங்கிருந்து சென்றார்.

செய்திகளை மேலும் அறிய எங்களது வாட்ஸ் ஆப் லிங்கை கிளிக் செய்து இணையவும்...


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement