செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அய்யோ.. அம்மா.. வலிக்குது வீடுபுகுந்த கொள்ளையனை ஊர் கூடி உரித்த சம்பவம்..! டுவிஸ்ட் வைத்த போலீஸ்

Sep 27, 2023 08:01:02 AM

வீடு புகுந்து திருடி விட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை தைரியமாக விரட்டிச்சென்று கட்டுமான தொழிலாளர்கள் உதவியுடன் பெண் ஒருவர் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து நகைகளை மீட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடு புகுந்து நகைகளை திருடிக்கொண்டு ஓடியவனை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அடி தாங்காமல் கொள்ளையன் கதறும் காட்சிகள் தான் இவை..!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து-நான்கு ரோடு செல்லும் சாலை பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் இவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், மனைவி நிவேதா வீட்டை பூட்டி விட்டு, பள்ளிக்குச் சென்ற குழந்தையை அழைத்து வர சென்றிருந்தார்.

திரும்பி வந்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததோடு, வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து இரண்டு இளைஞர்கள் ஒரு கருப்பு நிற ஷோல்டர் பேக்குடன் தப்பி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிவேதா திருடன், திருடன் என கூச்சலிட்ட வாரே அவர்களை தைரியமாக விரட்டிச்சென்றார்

பெண் ஒருவர் கூச்சலிடும் சத்தம் கேட்டு, அப்பகுதியில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தப்பி ஓடிய இளைஞர்களை துரத்தி பிடித்தனர், அவர்கள் கையில் வைத்திருந்த கருப்பு நிற ஷோல்டர் பேக்கையும் கைப்பற்றி நிவேதாவிடம் ஒப்படைத்தனர். சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி பொது மக்கள் இரு கொள்ளயர்களுக்கும் தர்ம அடி கொடுத்தனர்

ஊர் கூடி உரித்து எடுத்ததால், எழுந்திருக்க முடியாமல் படுத்துக்கிடந்த இருவரையும் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர்

போலீஸ் வாகனத்தில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறிய படி இருந்த ஒரு கொள்ளையனுக்கு இரண்டாவது ரவுண்டு அடிவிழுந்ததால் அலற தொடங்கினான்

பொதுமக்களிடம் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கொள்ளையர்களையும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பி ஓடிய திருடர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பேக்கில் இருந்து ஏராளமான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றுடன் ஒரு சிறு பையில் நெக்லஸ் ஒன்றும் இருந்தது. அதனை மட்டும் கைப்பற்றிய போலீசார் விசாரணைக்கு பின் தருவதாக கூறி வாங்கிச்சென்றனர்.

பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்ற இளைஞர்கள் இருவர் பொதுமக்களிடம் பிடிபட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 


Advertisement
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement