செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தறிகெட்ட தனியார் பேருந்து அதிவேகத்தால் பலியான உயிர் ஓட்டுனர் தப்பி ஓடிய காட்சிகள்..!

Sep 26, 2023 10:10:15 PM

சங்ககிரி அருகே லாரியை முந்திச்செல்ல வேண்டும் என்ற வெறியில் அதிவேகத்தில் இயக்கப்பட்ட தனியார் பேருந்து மோதி சாலையோரம் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த கோவில் ஊழியர் பரிதாபமாக பலியானார், விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓட்டுனரும் நடத்துனரும் தப்பிச்செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது

கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பேருந்தை ஓட்டிவந்து, ஒரு உயிரை பேருந்து ஏற்றி கொன்று விட்டு மனிதாபிமானமே இல்லாமல் தனியார் பேருந்து நடத்துனரும் ஓட்டுனரும் தப்பி ஓடும் காட்சிகள் தான் இவை..!

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் குமரசேன் . 42 வயதான இவர் பவானி கூடுதுறை பகுதியிலுள்ள கோயிலில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரு சக்கரவாகனத்தில் பவானியிலிருந்து மகுடஞ்சாவடிக்கு சென்ற போது, வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்ற எஸ்.என்.பி என்ற தனியார் பேருந்து , குமரேசனின் பின் பக்கம் வந்து அதிவேகத்தில் மோதியது

இதில் குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தின் நடத்துனரும், ஓட்டுனர் சுதாகரும் அடுத்தடுத்து பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். சாலையில் சென்ற இரு சக்கரவாகனத்தில் லிப்ட் கேட்டு அதில் ஏறி தப்பிச்சென்றனர்

இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் குமரேசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளை கைப்பற்றிய சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓட்டிய ஓட்டுனர் சுதாகரை கைது செய்தனர். முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது பேருந்தை கட்டுப்படுத்த இயலாமல் விபத்து நிகழ்ந்து விட்டதாக அவர் தெரிவித்தர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை போலீசார் ஜாமீனில் விடுவித்ததாக கூறப்படுகின்றது.

முழுக்க முழுக்க அதிவேகத்தில் பேருந்தை ஓட்டிவந்ததோடு, சரியான வகையில் இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்றவர் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய ஓட்டுனரை ஜாமீனில் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 


Advertisement
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement