செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

டூவீலர் திருடு போனால் இப்படியும் கண்டுபிடிக்கலாம்..! போலீசார் முன்வருவார்களா ?

Sep 26, 2023 07:59:38 AM

சென்னையில் களவாடப்பட்ட கே.டி.எம் பைக்கை ஒரு வருடம் கழித்து ஆந்திராவில் சர்வீஸுக்கு விட்ட போது உரிமையாளருக்கு வந்த குறுந்தகவலை வைத்து தமிழகத்தை சேர்ந்த ஆந்திர காவல் அதிகாரி ஒருவரின் உதவியால் ஒரே நாளில் பைக் மீட்கப்பட்டது.

சென்னை கொரட்டூரை சேர்ந்த பொறியாளர் காண்டீபன், கடந்த ஆண்டு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கே.டி.எம்.டியூக் 200 என்ற இவரது இரு சக்கரவாகனத்தை யாரோ மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டான்.

இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வண்டியை கண்டுபிடிக்க போலீசார் சிறு துரும்பைக்கூட தூக்கிப்போட முயற்சிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன்பாக காண்டீபன் வேலை விஷயமாக சிங்கப்பூர் சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த வாரம் அவரது செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் உங்கள் கேடிஎம் பைக் ஆந்திர மாநிலம் அனந்த்பூர் பைக் ஷோரூமில் சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது என்றும் அதற்கான கட்டணம் செலுத்தியதற்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து களவுபோன பைக் ஆந்திராவில் இருப்பதை அறிந்து சிங்கப்பூரில் இருந்தே நண்பர்கள் மூலம் அதனை மீட்க முயற்சி மேற்கொண்டார் காண்டீபன், அனந்த் பூரில் உள்ள அந்த பைக் சர்வீஸ் மையத்துக்கு சென்று பைக்கை சர்வீசுக்கு விட்ட நபரின் செல்போன் நம்பரை பெற்று அவர் வைத்திருப்பது திருட்டு பைக் அதனை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று அனந்த்பூர் எஸ்.பியான அன்புராஜிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த ips அதிகாரியான அன்புராஜ் உத்தரவின் பேரில் ஒரே நாளில் அந்த கே.டி.எம் பைக் மீட்கப்பட்டது. கொரட்டூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இது தொடர்பாக போடப்பட்ட எப்.ஐ.ஆர் தகவல்களை ஆந்திர போலீசார் கேட்ட போது , அவர்கள் சி.எஸ்.ஆர் கூட போடாதது தெரியவந்தது.!

இருந்தாலும் காண்டீபன் தான் அந்த இரு சக்கரவாகனத்தின் உரிமையாளர் என்பதை ஆவணங்களின் அடிப்படையில் போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து பைக்கை காண்டீபனின் நண்பர்களிடம் எஸ்.பி அன்புராஜ் வழங்க உத்தரவிட்டார்.

திருடப்பட்ட வண்டியில் நம்பர் பிளேட் அகற்றப்பட்ட நிலையில் அந்த டூவிலர் சர்வீஸ் ஷோரூமில் என்ஜின் ஜேசிஸ் நம்பரின் அடிப்படையில் பில் போடப்பட்டதாகவும், அதனால் தான் அந்த பில் குறித்த குறுந்தகவல், பைக்கை வாங்கிய உரிமையாளரின் செல்போன் நம்பருக்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

அனைத்து டூவீலர் மெக்கானிக்குகளும் இதே போல என்ஜின் ஜேசிஸ் எண் யாருடைய பெயரில் உள்ளதோ அவரது செல்போனுக்கு பில் அனுப்பினால் திருடப்பட்ட வண்டிகள் எளிதாக சிக்கிக் கொள்ளும் என்கின்றனர் ஆந்திர காவல்துறையினர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement