செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நா.. பாட்டுக்கு சிவனேன்னு... தானடா போயிட்டு இருந்தேன்...? எஸ்.ஐயை தட்டி சாய்த்த காளைகள்..!

Sep 25, 2023 09:02:01 PM

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடு சாலையில் நின்று சண்டையிட்ட காளைமாடுகள் ரெண்டு ஒன்றையொன்று தள்ளிக் கொண்ட நிலையில், சாலையோரம் ஒதுங்கி சென்ற காவல் உதவி ஆய்வாளரை இடித்து சாலையில் தள்ளிய காட்சிகள் வெளியாகி உள்ளது.

சாலையோரம் மல்லுக்கு நின்ற காளைகளை சிலர் விரட்டிவிட, சாலையின் நடுவில் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு சிலை போல காளைகள் நின்ற காட்சிகள் தான் இவை..!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் மாடுகளை சாலைகளில் அவிழ்த்து விட்டவர்களின் பொறுப்பற்ற செயலால் சுற்றித்திருந்த காளை மாடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. சாலையில் மல்லுக்கு நின்ற காளைகளை கண்டு வாகன ஓட்டிகள் மிரண்டபடியே விலகிச்சென்றனர். கடைக்காரர் ஒருவர் மாடுகளின் மீது தண்ணீர் ஊற்றி அவற்றின் சீற்றத்தை குறைக்க முயன்றார்.

ஆனால் சீற்றத்தை குறைப்பதற்கு பதில் அந்த இரு மாடுகளும் கட்டுப்படா சண்டியர்கள் போல சண்டையிட்டுக் கொண்டன. அப்போது அந்த வழியாக சாலையோரம் ஒதுங்கிச்சென்று கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளரின் இரு சக்கரவாகனத்தின் மீது வந்து ஒரு மாடு விழுந்தது. இதில் சாலையில் தள்ளிவிடப்பட்ட உதவி ஆய்வாளரை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கி விட்டனர்.

பெரிய இடத்தில் கைவைத்து விட்டோம் என்று உணர்ந்தது போல அதுவரை சாலையில் அட்ராசிட்டி செய்த மாடுகள் அனைத்தும் அங்கிருந்து ஓட்டம் எடுத்தன.

சாலைகளில் சுற்றித்திரியும் நாய், ஆடு மற்றும் மாடுகளால் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விபத்துக்களில் சிக்கும் விபரீதம் நிகழ்வதால் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Advertisement
திருக்குவளையில் கலைஞர் இல்லத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்..
மாணவர்கள் காலணியுடன்செல்வதால் வகுப்பறை குப்பையாவதாக புகார்.. சுத்தம் செய்த மேயர் சுந்தரி..
100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது
ஸ்ரீமதி மரண வழக்கில் விசாரணை ஒத்தி வைப்பு..
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக திரைப்பட இயக்குநர் மோகன் கைது...
பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி..
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்பு
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ்
செங்கல்பட்டில் சாதிச் சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படுவதால் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்


Advertisement