செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதலிக்கும் போது ஜாலி திருமணமுன்னா காலியா..? போலீசில் சிக்கி கட்டுனான் தாலி..! ஆதலால் காதலி.. காதலி.. காதலி..!

Sep 24, 2023 09:28:53 AM

6 வருடம் காதலித்த இளம் பெண்ணை 6 மாத கர்ப்பமாக்கிவிட்டு கழட்டி விட்ட காதலனை பிடித்த போலீசார், அவரிடம் கைது மந்திரம் ஓதியதால், ஜெயிலுக்கு பயந்து கோவிலில் வைத்து காதலியின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் விருத்தாசலம் அருகே அரங்கேறி உள்ளது.

எள்ளும் கொள்ளும் எரியுற மாதிரி முகத்துடன் கடு கடுவென காணப்படும் இவர் தான் காதலியை 6 மாத கர்ப்பிணியாக்கி விட்டு டாடா காண்பித்த புது மாப்பிள்ளை நிதிஷ்குமார்..!

விருத்தாசலம் அடுத்த பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் பி.ஏ.பட்டதாரியான நிதீஷ்குமார். இவரும் மங்கலம்பேட்டையில் உள்ள கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த நாகலெட்சுமி என்ற பெண்ணும் 6 வருடமாக காதலித்து வந்துள்ளனர். எல்லை மீறிய காதலால் நாகலட்சுமி 6 மாதம் கர்ப்பிணியானதால் அவரை நிதீஷ்குமார் கைவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது

தனது வாழ்க்கைக்கு நியாயம் கேட்டு நிதிஷ்குமார் வீட்டுக்கு சென்றும் பலனில்லததால், விருத்தசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் நாகலெட்சுமி. இதையடுத்து எஸ்கேப் காதலன் நிதிஷ்குமாரை பிடித்து, நாக லெட்சுமியை பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அடுத்த நிமிடம் காதலியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததால் இரு வீட்டாரும் கலந்து பேசினர். நிதீஷ்குமாருக்கு வேட்டி சட்டையும் , பெண்ணுக்கு கூரைபுடவையும் வாங்கிக் கொடுக்கப்பட்டது

மாப்பிள்ளை முறுக்கில் நின்ற நிதீஷ்குமார், கவலை தோய்ந்த முகத்துடன் நின்ற நாகலெட்சுமிக்கு வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் வைத்து தாலிகட்டினர்

மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டாலும், ஊரே சேர்ந்து நம்மை சிக்கவைத்து விட்டார்களே என்ற கடுப்பு மணமகனின் முகத்தில் தெரிந்தது

நாகலெட்சுமியின் வாழ்க்கைக்கு முழு பொறுப்பு ஏற்று காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்த நிதிஷ்குமார், திருமணம் முடிந்த சில நிமிடங்களுக்கெல்லாம் மாலையை கழற்றிக் கொண்டு கடுப்புடன் விலகிச்சென்றார்

போலீஸ் வழக்கில் இருந்து தப்பிக்க காதலியை மணந்தாலும் காலமெல்லாம் தாலி கட்டிய மனைவியை வைத்து காப்பாற்ற வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement