செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கண்ணீருடன் முற்றுகையிட்ட பெண்கள் மனு வாங்க கூட நேரம் இல்லை... அமைச்சர் சக்கரபாணி பிஸி.. பிஸி ..!

Sep 24, 2023 08:01:01 AM

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில்  சாலையோர வியாபாரிகளின் நலன் கருதி மத்திய அரசின் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ்  61 லட்சம் மதிப்பில் 83 வண்டிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கிய நிலையில், வியாபாரிகள் அல்லாத கட்சியினருக்கு வண்டிகள் வழங்கப்பட்டதாக கூறி அமைச்சரை பெண்கள் முற்றுகையிட்டனர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 100 க்கும் மேற்பட்டோர் சாலை ஓரங்களில் பூக்கடை, பழக்ககடை மற்றும் உணவுக்கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் மத்திய அரசின் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 61 லட்சம் மதிப்பில் 83 வண்டிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து உள் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்த அமைச்சரை பெண் வியாபாரிகள் முற்றுகையிட்டனர்

ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திலிருந்து தாராபுரம் சாலை பிரிவு வரை 50 ஆண்டுகளாக சாலை ஓரத்தில் தள்ளுவண்டி கடைகள் நடத்தி வரும் பெண்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் முறைப்படி எங்களுக்கு வண்டிகள் வழங்கவில்லை என்றும் 18 வார்டுகளில் உள்ள கவுன்சிலர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் நகராட்சி மூலம் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் புகார் தெரிவித்தனர்

யாசகம் கேட்பது போல கையேந்திய தாய்மார்களிடம் உங்களுடைய பெயரை எழுதிக் கொடுங்கள் வண்டி கொடுக்கச் சொல்லலாம் என்று கூறி அங்கிருந்து சென்றார்

இதனால் காலையிலிருந்து புகார் மனு அளிக்க காத்திருந்த சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு வண்டி கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் திரும்பி சென்றனர். மத்திய அரசு நிதியில் வழங்கப்படும் இத்திட்டத்தில் தகுதியான பயனாளிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம் கவனக்குறைவாக செயல்பட்டது அம்பலமாகி உள்ளது


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement