செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வீடு புகுந்து கணவனையும் மாமியாரையும் அடித்து வெளியே ஓடவிட்ட மருமகள்..!

Sep 23, 2023 07:38:00 AM

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் 2 வது திருமணம் செய்த கணவரையும், அவதூறாக பேசிய மாமியாரையும் வீடுபுகுந்து மருமகள் புரட்டி எடுத்த சம்பவம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரங்கேறி உள்ளது


திருமணம் செஞ்சி 2 வருஷம் குடித்தனம் நடத்துவாராம் .... அப்புறம் அம்மாவீட்டுக்கு அனுப்பிட்டு வெளி நாடு போய்விடுவாராம்...!

2 வருஷம் கழிச்சி வந்து... நடத்தையை பற்றி அவதூறா பேசுவாராம்... தட்டிக்கேட்டா தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு 2 வது திருமணம் செஞ்சிக்குவாராம்....இது எந்த ஊர் நியாயமுன்னு கேட்டு கணவனை ஓடவிட்ட காட்சிகள் தான் இவை..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசல், ஆறகளூர் கிராமத்தை சேர்ந்த கருணைக்கடல் என்பவரின் மகன் செந்தில்குமாருக்கும், ஆத்தூர் நேரு நகரை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் அபிராமிக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 ஆண்டுகளில் மனைவி அபிராமியை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்த செந்தில்குமார் வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். 2018 ஆம் ஆண்டு ஊர் திரும்பிய செந்தில்குமார், மனைவியை அழைத்துச்சென்று தனிக்குடித்தனம் சென்றதாகவும், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனைவியை மீண்டும் தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு செந்தில்குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இருவருக்குமிடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணை 2 வதாக திருமணம் செய்து கொண்டு செந்தில்குமார் குடும்பம் நடத்துவதாக மனைவி அபிராமிக்கு தெரியவந்ததால் கணவர் வீட்டுக்குள் புகுந்து ருத்ர தாண்டவமாடினார்

வீட்டுக்குள் இருந்த 2 வது மனைவியை பிடித்து நாலு சாத்து சாத்திய நிலையில், தனது நடத்தை குறித்து அவதூறாக பேசிய மாமியாரையும் புரட்டி எடுத்தார்

தடுக்க வந்த கணவர் செந்தில்குமாருக்கும் சில பல அடிகள் விழுந்ததால், அடி தாங்காமல் வீட்டை விட்டு வெளியே ஓடிச்சென்று 6 வருசமாக எங்கே போயிருந்தாய் ? என்று சவுண்டு விடும் சங்கடமான நிலை ஏற்பட்டது

நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போதே உனக்கு இன்னோரு பொண்ணு கேட்குதா என்று அபிராமி ஆவேசமான நிலையில் தனது 2 வது மனைவியை வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண் என்று சமாளித்தார் அப்படி இருந்தும் அபிராமியின் ஆவேசம் குறையவில்லை

மனைவியின் உறவினர்களும் வீட்டிற்குள் புகுந்து நியாயம் கேட்டதால் மாப்பிள்ளை செந்தில்குமார் பதற்றமானார்

மாமியார் மற்றும் கணவர் மீதுள்ள ஆத்திரத்தை எல்லாம் அடியாக இறக்கிய அபிராமி ஒரு கட்டத்தில் சாந்தம் அடைந்து வீட்டு வாசலில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

வெளியே வந்தால் மீண்டும் அடிவிழுமோ என்ற அச்சத்தில் செந்தில்குமார் குடும்பத்தினர் வீட்டிற்குள் இருந்தனர், தகவல் அறிந்து வந்த போலீசார், வீடுபுகுந்து தாக்குதல் மற்றும் சட்டவிரோத திருமணம் என இருதரப்பு புகார்களை பெற்று விசாரித்து வருகின்றனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement