செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

80 வயது பாட்டி கொடுத்த டஃப் பைட் நடுங்கிய பெண் போலீஸ்..!

Sep 22, 2023 09:07:52 PM

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அருகே கொத்தியார்கோட்டை கிராமத்தில் கன்மாய்கரையில் பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மறியலில், 80 வயது மூதாட்டி ஒருவர் ஜே.சி.பி யை மறித்து போராட்டம்  நடத்தியதால் அவரை பெண்போலீசார் ஆடைகளை பிடித்து இழுத்து தூக்கிச்சென்றனர்

ஆள் தான் பார்க்க ஒடிசலான தேகம் ... தூக்கிப்பார்த்தா வைரம் பாஞ்ச கட்டை... பாலம் அமைக்கும் பணிக்கு வந்த ஜேசிபி யை தடுத்து பெண் போலீசுக்கே டஃப் பைட் கொடுத்த 80 வயது மூதாட்டி இவர் தான்..!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே கொத்தியார் பேட்டையில் 17 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருப்பாலைக்குடியில் இருந்து, பால்குளம், கொத்தியார்கோட்டை வழியாக சோழந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பால்குளம் கன்மாய் கரையில் இந்த பாலம் அமைக்கப்படுகின்றது. இந்த பாலம் அமைக்கப்பட்டால் பால்குளம் கண்மாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியே சென்று விடும் என்றும் இதனால் 300 ஏக்கரில் நெல், மிளகாய், பருத்தி பயிரிடும் விவசாயிகள் கடுமையாக பதிக்கப்படுவர் எனக்கூறி விவசாயிகள் பாலம் கட்டும்பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் குதித்தனர்

நீதிமன்ற உத்தரவு இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அபோது ஒரு மூதாட்டி பாலத்துக்காக பள்ளம் தோண்டிய ஜேசிபியை தடுக்க பள்ளத்துக்குள் குதித்தார். அவரை தூக்க பெண் போலீஸ் ஒருவர் முயல அவரால் முடியவில்லை

ஒற்றைகையில் மூதாட்டியை தூக்கி விடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட பெண் போலீஸ், உதவிக்கு உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் குழிக்குள் இறங்க தூக்க இயலாமல் கால்கள் நடுங்கியது

மூதாட்டியின் சேலை மற்றும் மேலாடையை பிடித்து இழுத்ததால் பாட்டி தனது பலத்தை சற்று குறைத்துக் கொண்டதால் அவரை அப்படியே தூக்கிச்சென்றனர்

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வேனில் ஏற்றிய நிலையில் தங்களை போலீசார் தாக்குவதாக பெண்கள் கூச்சலிட்டனர்

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மக்கள் பாதிக்காத வகையில் பாலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement