செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காரைக்கால் செட்டிநாடு ஓட்டலில் கெட்டுப்போன சிக்கன், ஊசிப்போன சோறு பறிமுதல்..! உளுந்தூர்பேட்டையில் அதிகாரிகள் அதிரடி

Sep 22, 2023 08:27:17 AM

 உளுந்தூர் பேட்டை டோல் கேட் பகுதி ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட  உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காரைக்கால் செட்டி நாடு ஓட்டலில் இருந்து கெட்டுப்போன சிக்கன் , ஊசிப்போன சோறு உள்ளிட்ட உணவு வகைகளை கைப்பற்றி அழித்தனர்.

தென்மாவட்டங்களில் இருந்து கார்களில் சென்னைக்கு வரும் பெரும்பாலானவர்களின் மதிய உணவுக்கு தேர்வாக இருக்கும், உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதி பிரமாண்ட ஓட்டல்களில் தான் கள்ளக்குறிச்சி உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

வரிசையாக ஒவ்வொரு ஓட்டலாக அதிகாரிகள் ஆய்வுக்கு சென்ற நிலையில் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான காரைக்கால் செட்டி நாடு உணவகத்திலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு 3 வது முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் குளிர்பதனப்பெட்டிக்குள் இருந்து 50 கிலோவுக்கும் மேற்பட்ட அழுகிய கோழி இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றினர்

மசாலா தடவி வேக வைக்கப்பட்ட சிக்கன் கெட்டுப் போயிருப்பதை கண்டு அதனையும் கைப்பற்றி குப்பையில் கொட்டினர்

தந்தூரி சிக்கன், பூஞ்சையுடன் காணப்பட்ட சப்பாத்தி மாவு உருண்டைகளையும் கைப்பற்றினர்
டப்பாக்களில் இருந்த ஊசிப்போன சோறு, முந்தின நாள் தயார் செய்யப்பட்ட சப்பாத்தி ரொட்டிகள், மற்றும் புரோட்டாக்களையும் கைப்பற்றிய அதிகாரிகள் அதன் மீது பினாயிலை ஊற்றி அழித்தனர்

ஏற்கனவே வேறு எங்கோ தயாரான பொருட்களை சூடு செய்து கொடுப்பதை காரைக்கால் செட்டி நாடு உணவகத்தினர் செய்து வருவது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதே போல அருகில் இருந்த ஸ்ரீ கலா மெஸ் என்ற ஓட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கிருந்து கிலோ கணக்கில் கெட்டுபோன சிக்கனை பறிமுதல் செய்தனர்

அங்கு அதிக நிறம் சேர்க்கப்பட்ட கெட்டுபோன சிக்கன் உணவுவகைகளை கைப்பற்றி அழித்தனர்

மானாமதுரை ஸ்ரீ கண்ணன் செட்டினாடு ஓட்டலில் இருந்து , கலர் அதிகம் சேர்க்கப்பட்ட சிக்கனையும், கெட்டுபோன சிக்கனையும் கைப்பற்றி அழித்தனர்

கிருஷ்ணகிரியில் மார்க் ஆண்டனி படம் திரையிடப்பட்டுள்ள, பழைய திரையரங்கு ஒன்றில் இருந்து ஊசி போன பப்ஸ், சிலந்தியுடன் சிப்ஸ் பாக்கெட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement