செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு

Sep 21, 2023 08:16:13 AM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீட்டில் இருந்து 4 செல்போன்களை திருடிச்சென்ற திருடர் ஒருவர், செல்போன் உரிமையாளரின் மனைவிக்கு போன் செய்து செல்போனை திருப்பித்தர பேரம் பேசி போலீசிடம் சிக்கி உள்ளார். கரும்பு தோட்டத்தில் பதுங்கிய திருடருக்கு நடந்த சிறப்பு கவனிப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

வீடு புகுந்து செல்போன்களை திருடிவிட்டு செல்போன் உரிமையாரிடம் பணம் கேட்டு கரும்பு தோட்டத்திற்கு அழைத்த திருடர் குல திலகம் இவர் தான்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தராசு கிராமத்தை சேர்ந்த ஏழைப்பெருமாள் என்ற விவசாயி வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த இரு செல்போன்கள் மாயமானது. அந்த செல்போனில் இருந்து அவரது மனைவியின் செல்போனுக்கு பேசிய மர்ம ஆசாமி ஒருவர், உங்கள் செல்போன் என்னிடம் தான் உள்ளது உங்கள் கணவரை பேசச்சொல்லுங்கள் என்று கூறி உள்ளார். ஏழைப்பெருமாள் தொடர்பு கொண்டு பேசிய போது உங்கள் செல்போனோடு சேர்த்து உங்கள் ஊரில் 4 செல்போன்களை திருடி வைத்துள்ளேன் புதிதாக செல்போன் வாங்க போன ஒரு போனுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் ஆகும், உங்களுக்காக 4 செல்போன் 15 ஆயிரம் ரூபாய்க்கு தருகிறேன் தனியாக வந்து வாங்கிட்டு போங்க, போலீஸ் கிட்ட போனா அவனுங்க என்னை விட திருட்டு பசங்க என்னை பிடித்து காசு வாங்கிட்டு வெளியே விட்டுருவாய்ங்க என்று கூறிய அந்த திருடர், வரும் போது அப்படியே ஓட்டலில் சாப்பாடு வாங்கிட்டு வந்துடுங்க என்று கூறியது தான் அந்த ஆடியோவின் ஹைலைட்..!

ஏற்கனவே ஒரு ஊரில் செல்போனை திருடிய போது வாங்க வந்தவர் நிறையபேரை கூட்டி வந்ததால் செல்போனை கொடுக்க வில்லை என்று தனது தொலை நோக்கு பார்வையை விவரித்தார் அந்த திருடர், தன்னிடம் பணம் இல்லை என்ற ஏழை பெருமாளிடம் நீ 10 ஆயிரம் ரூபாய் தந்தால் போதும், மற்ற 2 செல்போனுக்கு சொந்த காரங்ககிட்ட மீதிப்பணம் வாங்கிக் கொள்கிறேன், தனியாக கரும்பு தோட்டத்துக்கு வந்து செல்போன் லைட்டை உயர்த்தி காட்டுங்க உங்க செல்போனை உங்களுக்கு தருகிறேன் என்று டெக்னிக்கல் கோடுவேடு சொன்னார் அந்த திருடர் குல திலகம்.

திருடரின் ஆடியோவை போலீசாரிடம் ஒப்படைத்த ஏழைப்பெருமாள் செல்போன் திருட்டு குறித்து புகார் தெரிவித்த நிலையில் திருடர் சொன்ன கரும்பு தோட்டத்தை சுற்றி போலீசார் சாதாரண உடையில் பதுங்கி இருந்தனர். இருள் சூழ்ந்த நேரத்தில் செல்போன் லைட்டை உயர்த்தி காட்டியதும் , கருவாட்டை பார்த்த பெருஞ்சாளி போல வெளியே வந்த அந்த திருடரை மடக்கிப்பிடித்த போலீசார் சிறப்பாக கவனித்து அவரிடம் இருந்த செல்போன்களை கைப்பற்றினர்.

திருடிய செல்போனை கடையில் விற்றால் ஆயிரமோ ரெண்டாயிரமோதான் கிடைக்கும் ஆனால் செல்போனுக்கு சொந்தக்காரங்க கிட்டே பேரம் பேசி விற்றால் கூடுதலாக பணம் கிடைக்கும் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார் செல் திருடர் திண்டிவனம் அய்யனார்.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement