செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பனிக்கட்டி சோறு.. களி மாதிரி சால்னா.. அழுகி போன சிக்கன்..! ரெஸ்ட்ரண்ட் பிரிட்ஜா ? குப்பை தொட்டியா ?

Sep 20, 2023 07:53:36 AM

நாமக்கல் ஓட்டலில் சவர்மா சாப்பிட்டு சிறுமி பலியான நிலையில் தமிழகம் முழுவதும் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ரெஸ்டாரண்டு மற்றும் ஓட்டல்களின் குளிர்சாதன பெட்டியில் இருந்து கிலோ கணக்கில் கெட்டுபோன சிக்கன் , மட்டன், முந்தின நாள் வைத்த சோறு, சால்னா, குருமா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.

நாமக்கல் ஓட்டலில் சவர்மா சாப்பிட்டு சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கோழிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார் கோழிக்கடையில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் , கோழிக்கறியில் ஈ மொய்ப்பதை கண்டு ஊழியர்களை கடிந்து கொண்டார்

கையில் உடைக்க முடியாத பனிக்கட்டி மாதிரி இருக்கே இது நாளு நாளைக்கு முன்னாடி தயாரான் சோறு... இதில் தான் பிரைடு ரைஸ் தயாராகுதாம்... சேலம்,ஆத்தூரில் உள்ள பாரடைஸ் ரெஸ்டாரண்டில்..!

இங்குள்ள குளிர்பதன பெட்டியில் மீந்து போன சால்னாவ பிரிட்ஜில் வைத்ததால் களி மாதிரி இருந்தது, அதனை வாணலியில் போட்டு சுடு தண்ணீரை ஊற்றினால் சூடான சால்னா தயார் என்று கூறி அதிகாரிகளை மிரள வைத்தனர்.

கெட்டுப்போன சிக்கன் என்று கிலோ கணக்கில் உணவு பொருட்களை குப்பை லாரியில் ஏற்றினர் உணவு பொருள் பாதுகாப்புத்துறையினர்

தங்களை கிரில் எக்ஸ்பெர்ட் என்று கூறிக்கொள்ளும் சேலம் பார்பிகுயின் ரெஸ்டாரண்டில் கெட்டுபோன சிக்கனை கைப்பற்றிய அதிகாரிகள் முந்தின நாள் தயாரான சிக்கன் சவர்மாவையும், மைதா ரொட்டிகளையும் கொட்டி அழித்தனர்

அரியலூரில் ஹைஜீனிக் பிரைடு சிக்கனை விற்பதாக கூறும் மீட் அண்ட் ஈட் சிக்கன் ரெஸ்ட்ராண்டில் வாரக்கணக்கில் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பாக்கெட் பிரியாணியையும், கெட்டுபோன சிக்கன் இறைச்சி வகைகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர்

புதுக்கோட்டை மீட் அண்ட் ஈட் உணவகத்திலும், டிசைன் டிசைனாக வெட்டி வாரக்கணக்கில் பிரிட்ஜிக்குள் பதப்படுத்தப்பட்டிருந்த கெட்டுபோன சிக்கன் வகைகள் அனைத்தையும் குப்பையில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தனர்

கரூரில் கொக்கரக்கோ உணவகத்தில் சிகப்பு வர்ணம் சேர்க்கப்பட்ட கெட்டுபோன சிக்கன் கைப்பற்றி அழிக்கப்பட்டது

குளித்தலையில் உள்ள ஓட்டலில் கெட்டுப்போன சிக்கனையும், குல்பி சிக்கன் உருண்டைகளையும் பறிமுதல் செய்து அழித்தனர்

ஈரோட்டில் பார்பிக்கியூ நேசன் என்ற ரெஸ்ராடண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் ஹைபையாக மசலா தடவி வைக்கப்பட்டிருந்த கெட்டுபோன சிக்கன் மட்டன், இரால் வகைகளை கைப்பற்றினர்

பூந்தமல்லியில் சவர்மாவுக்காக வைக்கப்பட்டிருந்த சிக்கனை எடுத்து அதிகாரிகள் குப்பையில் கொட்டினர்

சிவகங்கை தொண்டி ரோடு பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் இருந்து 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் ஷவர்மா மற்றும் கலர் கலந்த பிரியாணியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

நெல்லை அரேபியன் ஹாட் கிரில் ரெஸ்டாரண்டில் கெட்டுபோன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது

பழனி அம்சவள்ளி ஓட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள் கிலோ கணக்கில் அழுகிய சிக்கனை அள்ளி குப்பையில் கொட்டினர்

கோவை கோட்டைமேடு பகுதியில் வீதியில் சுற்றித்திரிந்த உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் , உணவகங்களுக்குள் செல்லாமல், அதிக வர்ணம் கலக்கப்பட்ட தந்தூரி சிக்கனையோ, சுகாதாரமின்றி திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த சவர்மா சிக்கனையோ பறிமுதல் செய்யாமல் ஒப்புக்கு பேசிவிட்டு சென்றனர்


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement