செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பிறந்த நாள் பார்ட்டியில்... கெட்டுப்போன சிக்கன் ஷவர்மா.. பரிமாறிய ஹோட்டலுக்கு சீல்...!

Sep 18, 2023 07:19:33 AM

கெட்டுப்போன சிக்கனில் தயாரிக்கப்பட்ட ஷவர்மா உணவை சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிக்கன் பரிமாறிய உணவகத்திற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்.

பிறந்த நாள் பார்ட்டியில் ஷவர்மாவை சாப்பிட்டு விட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் 13 பேர்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள ஐ-வின்ஸ் என்ற உணவகத்திற்கு நண்பர்களை அழைத்துச் சென்று விருந்து வைத்துள்ளார். சிக்கனை இரும்பு கம்பியில் சொருகி நெருப்பில் வைத்து தயாரிக்கப்படும் ஷவர்மா என்ற உணவையும், ஃப்ரைடு ரைசும் ஆர்டர் செய்து மாணவ-மாணவிகள் சாப்பிட்டுள்ளனர்.

விருந்து முடிந்து கல்லூரி விடுதிக்குச் சென்ற நிலையில் ஞாயிறு காலையில் ஒருவரைத் தொடர்ந்து ஒருவருக்காக வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 13 பேருக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்படவே, உடனடியாக அனைவரையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் விடுதி ஊழியர்கள்.

தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா, மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தாஅருள்மொழி ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து விசாரணை நடத்தினர். அப்போது, இரவில் சிக்கன் சவர்மா சாப்பிட்டதை அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஐ-வின்ஸ் ஹோட்டலுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா. மாணவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என உணவக உரிமையாளர் நவீன்குமாரிடம் கேட்டறிந்த ஆட்சியர், சமையல் கூடத்தையும் பார்வையிட்டார். அங்கு, சமையலுக்காக கெட்டுப்போன இறைச்சி வைத்திருந்தது தெரிய வரவே, மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவும், உணவகத்திற்கு சீல் வைக்கவும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, கெட்டுப்போன இறைச்சிகளை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்புத்துறையினர், உணவகத்திற்கும் சீல் வைத்தனர்.

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement