செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குள்ள சிவா என்கவுண்டர்.. போலீசார் பேசியது என்ன..? வெளியானது பகீர் வீடியோ..!

Sep 18, 2023 06:42:08 AM

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ரவுடி ‘குள்ள’ விஸ்வா போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், 20 நாட்களுக்கு முன்பாக காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த விஸ்வாவை சுட்டுக் கொன்று விடுவதாக சப்இன்ஸ்பெக்டர் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி குள்ள விஸ்வா என்கிற விஸ்வநாதன் . 34 வயதான சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, நாட்டு வெடிகுண்டு வீச்சு, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு 21 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கையெழுத்திட்டு வந்த விஸ்வா, கடந்த சில வாரங்களாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் தனது மனைவியை அபகரித்து வைத்துக்கொண்டு விஸ்வா கொலை மிரட்டல் விடுப்பதாக பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் குள்ள விஸ்வாவை ஏடிஎஸ்பி. வெள்ளத்துரை தலைமையில் உள்ள தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

சுங்குவார்சத்திரம் அருகே சோகண்டி அடுத்த பகுதியில் உள்ள மாந்தோப்பில் விஷ்வா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குள்ள விஸ்வாவை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றதாகவும், விஸ்வா மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து போலீசாரை தாக்கி விட்டு தப்பித்து ஓட முயன்றபோது தனிப்படை போலீசார் தற்காப்புக்காக தூப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்து விஸ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

விஸ்வா தாக்கியதில் காயம் அடைந்ததாக தலைமை காவலர்களான ராஜேஷ்,வாசு ஆகியோர் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். என்கவுண்டர் செய்த ரவுடி விஸ்வாவின் உடலை போலீசார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்துக்கு 20 நாட்களுக்கு முன்பாக வழக்கறிஞர்களுடன் விசாரணைக்கு ஆஜரான ரவுடி குள்ள விஸ்வாவை சுட்டு விடவா ? என்று சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆவேசமாக பேசுவது போன்ற வீடியோ ஒன்று அவரது வழக்கறிஞர்களால் வெளியிடப்பட்டது.

ரவுடி தாக்கியதில் காயம் பட்ட போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக சட்டம் ஒழுங்கு காவல் ஏடிஜிபி அருணிடம், ரவுடி விஸ்வாவை என்கவுண்டர் செய்வதாக போலீசார் முன்கூட்டியே மிரட்டியதாக வெளியான வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் ஓரகடம் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த வீடியோ குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement