செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒரு கிலோ 3 ரூபாய் தான்... வெண்டைக்காய் தோட்டத்தை ஆடுகளை விட்டு அழிக்கும் விவசாயிகள்..!

Sep 16, 2023 08:05:29 AM

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பல நூறு ஏக்கர்களில் பயிரிடப்பட்ட வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாக இருந்தும், ஒருகிலோ 3 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் கேட்பதால் வெண்டைக்காய் தோட்டத்தில் ஆடுகளை மேய விட்டு அழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெண்டைக்காய் பயிரிடப்பட்டுள்ளது . ஞாபகசக்தியின் உந்து சக்தி என்று மருத்துவர்களால் போற்றப்படும் இந்த வெண்டைக்காய்களை இங்கிருந்து தூத்துக்குடி கோவில்பட்டி நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்திகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் வரலாறு காணாத அளவில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. வழக்கமாக ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரித்து வரத்து அதிகமாக இருப்பதாலும் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பல ஏக்கரில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளோம். முறையாக நீர் பாய்ச்சி, உரம் வைத்து பேணியதால் விளைச்சல் அதிகமாக இருந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட வெண்டைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வியாபாரிகள் எங்களிடமிருந்து ஒரு கிலோ வெண்டைக்காய் 3 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். பறி கூலி கூட கொடுக்க இயலாததால் வெண்டைக்காயை பறிக்காமல் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்

கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ 15 ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரையிலும், வெளி கடைகளில் 25 ரூபாய் வரை விலைவைத்து விற்கப்படும் வெண்டைக்காயை தமிழக அரசு உரிய விலை கொடுத்து நேரடியாக கொள்முதல் செய்து பண்ணை பசுமை காய்கறி கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடி மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement