செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

முருங்கை மவுசு அவ்வளவுதானா ? கோயம்பேட்டில் கிலோ 35 ரூபாய் வயல்காட்டில் 3 ரூபாய் தானாம்..! டிராக்டரால் முருங்கையை அழித்த விவசாயி

Sep 14, 2023 08:15:13 PM

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்ட முருங்கைக்காய்களுக்கு போதிய விலை இல்லாததால் விரக்தி அடைந்த விவசாயி ஒருவர் 5 டன் முருங்கைக்காய்களுடன் முருங்கை மரங்களை டிராக்டர் கொண்டு அழித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ராப்பகல் கண்விழித்து ... பக்குவம் பார்த்து தண்ணீர் விட்டு வளர்த்த முருங்கை தோட்டத்தை... டன் கணக்கில் காய், பிஞ்சு பூக்களுடன் டிராக்டர் கொண்டு அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் முருங்கை விவசாயிகள்..!

அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் , ஜெயங்கொண்டம் பகுதிகளில் விவசாயிகள் முருங்கையை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முருங்கை சாகுபடி செய்திருந்தார்.

கூலி ஆட்களை கொண்டு பறிக்கப்பட்ட முருங்கைக்காயை மூட்டைகளாக கட்டி விற்பனைக்காக கும்பகோணம் சந்தைக்கு எடுத்துச் சென்றுள்ளார் விவசாயி குமார். . பறிக்கப்பட்ட முருங்கைக்காயை சந்தைக்கு கொண்டு சென்ற விவசாயி குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சந்தையில் 2 ரூபாய் 3 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைக்காயை கூட விவசாயிகளிடம் வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையே காணப்பட்டது. இதனால் முருங்கை மூட்டைகளை சாலையோரம் குப்பை போல கொட்டிச்சென்றார்

ஒரு கட்டத்தில் முருங்கை வயலுக்கு வந்து பறிக்கும் கூலிச் செலவுக்கு கூட முருங்கைக்காய் விற்பனையாகவில்லையே என விரக்தியில் பூவும் பிஞ்சுமாய் , காய்களுமாக இருந்த முருங்கை தோட்டத்தை டிராக்டர் முழுவதுமாக அழித்து உழவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்

தற்போது இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய்க்கு கூட சந்தையில் வாங்குவதற்கு ஆள் இல்லை , இந்த வயலில் 5 டன் அளவிற்கு முருங்கைக்காய் மரத்தில் உள்ளது வேறு வழி இல்லாததால் இதனை தற்போது அழித்து வருவதாக கையெடுத்து கும்பிட்டு வேதனையோடு தெரிவித்தார் குமார்

விலையில்லை என்று விவசாயி முருங்கை தோட்டத்தை அழித்துள்ள நிலையில், சென்னை கோயம் பேட்டில் ஒருகிலோ முருங்கைக்காய் 35 ரூபாய்க்கும் சில்லரைகடைகளில் 50 ரூபாய் வரையும் விலை வைத்து முருங்கைக்காய்கள் விற்கப்படுவது குறிப்பிடதக்கது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement