செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முதல் 3 ஆண்டுகளில் சனாதன ஒழிப்புப் பேச்சு..! கடைசி 2 ஆண்டுகளில் ஹிந்து ஆதரவு காட்சி..! அண்ணாமலையின் அதிரடி 'அட்டாக்'..!!

Sep 12, 2023 11:13:02 AM

ஆட்சிக்கு வந்த முதல் மூன்று ஆண்டுகளில் சனாதனத்துக்கு எதிராக பேசும் தி.மு.க. கடைசி 2 ஆண்டுகளில் தங்கள் கட்சியில் 90 சதவீதம் பேர் ஹிந்துக்கள் என்று கூறுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் த.மு.எ.ச. மாநாட்டில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசிய போது அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்த சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் முதலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அண்ணாமலை, சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய மேடையில் சேகர்பாபு அமைதியாக அமர்ந்திருந்ததாக கண்டனம் தெரிவித்தார்.

மதங்கள் வருவதற்கு முன்பே சனாதனம் இருந்து வருவதாகவும் ஆதி காலத்தில் இருந்தவர்கள் சனாதனத்தை மட்டுமே பின்பற்றியவர்கள் என்றும் குறிப்பிட்ட அண்ணாமலை, பெரியார் பிறந்த போது கூடவே சனாதனம் பிறந்தது போல தி.மு.க.வினர் பேசுவதாக தெரிவித்தார். உடன்கட்டை ஏறுதல், கைம்பெண் மறுமணம், குழந்தைத் திருமணம் போன்றவற்றில் சீர்திருத்தங்களை செய்தவர்கள் சனாதனிகள் தான் என்றும் அவர் கூறினார்.

தி.மு.க. வந்த பிறகு தான் தமிழகத்தில் ஜாதி அரசியல் வந்தது என்று தெரிவித்த அண்ணாமலை, தென் தமிழகத்தில் 30 நாட்களில் 23 கொலைகள் அரங்கேறியுள்ளன என்றார்.

சனாதனம் பற்றி தவறாக பேசுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், ஆட்சியில் இருப்பதால் சனாதனத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்தக் கூடாது என்றார். ஆட்சிக்கு வந்த முதல் மூன்று ஆண்டுகளில் சனாதனத்துக்கு எதிராக பேசும் தி.மு.க. கடைசி 2 ஆண்டுகளில் தங்கள் கட்சியில் 90 சதவீதம் பேர் ஹிந்துக்கள் என்று கூறுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.வினர் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாக சென்றனர். அறநிலையத்துறை அலுவலகத்திற்கு அருகே போலீசார் தடுத்ததால் அண்ணாமலை உள்ளிட்டோர் சாலையின் நடுவே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அண்ணாமலை உள்ளிட்டோர் கலைந்து சென்றனர்.

பா.ஜ.க. போராட்டத்தால் நுங்கம்பாக்கம் பகுதியில் மாலை 3 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் நிறைவடைந்த பின் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்தது.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement