செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரூ.12க்கு வாங்கி ரூ.60க்கு விற்கிறார்கள்! விவசாயியை நோகடிக்கும் விலை நிர்ணயம்

Sep 06, 2023 11:52:25 AM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சுமார் ஆறு ஏக்கரில் ஒட்டு தக்காளி மற்றும் ஒட்டு கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர், உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்து, விவசாயத்தை விட்டு கூலி வேலைக்குச் சென்றுவிடலாமா என யோசித்து வருவதாகக் கூறுகிறார். 

பொன்னேரியை அடுத்த தடம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து, அங்குள்ள விவசாய முறைகளை கற்று வந்து தனது நிலத்தில் பயிரிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இஸ்ரேல் சென்று வந்த அவர், அங்கு பயிரிடுவதுபோல், தக்காளியையும் கத்திரிக்காயையும் புதிய தொழில்நுட்பத்துடன் பயிரிட்டுள்ளார்.

சுமார் 6 ஏக்கரில் பிரம்மாண்டமாக பரந்து விரிந்திருக்கிறது சீனிவாசனின் காய்கறித் தோட்டம். இஸ்ரேல் விவசாய முறைப்படி சுண்டைக்காய் தண்டில் கத்தரிக்காயையும் கத்தரிக்காய் தண்டில் தக்காளியையும் ஒட்டுரகமாக சாகுபடி செய்துள்ளார்.

சாதாரண நாற்றுகள் 6 மாதங்கள் வரை மட்டுமே விளைச்சல் கொடுக்கும் நிலையில், இதுபோன்ற ஒட்டுரகம் 3 முதல் 4 ஆண்டுகள் வரை விளைச்சல் கொடுக்கும் என்கிறார் சீனிவாசன்.

தக்காளியும் கத்தரிக்காயும் நல்ல விளைச்சல் கொடுத்தாலும் உரிய விலை கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கிறார் சீனிவாசன்.

ஒட்டு ரக கத்தரிக்காய் ஒரு நாற்று 8 ரூபாய் என்கிற ரீதியில் வாங்கி வந்து பயிரிட்டு, அதனை பராமரிப்பதற்காக வாரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகக் கூறும் சீனிவாசன், ஒட்டுமொத்தமாக ஏக்கர் ஒன்றுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவானதாகக் கூறுகிறார்.

ஆனால் கத்தரிக்காய் கிலோ 10 ரூபாய் 12 ரூபாய் என்றே கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறுகிறார். தன்னிடமிருந்து கிலோ 10 ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கிலோ 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர் என்றும் சீனுவாசன் கூறுகிறார்.

ஆசை ஆசையாய் பயிர் சாகுபடி செய்ததாகக் கூறும் சீனிவாசன், உரிய விலை கிடைக்காத விரக்தியில் கூலி வேலைக்கே சென்றுவிடலாம் போல இருப்பதாகக் கூறுகிறார். விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை வந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு என்றும் அவர் தெரிவித்தார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement