செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காவிரி தண்ணீரை நம்பி கண்ணீர் விடும் விவசாயிகள்.. இழப்பீட்டுக்காக காத்திருப்பு..!

Sep 02, 2023 08:32:22 AM

நாகப்பட்டினம் மாவட்டம் ஆதமங்கலம் கிராமத்தில் காவிரி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட குருவை பயிர்கள் தண்ணீரின்றி கருகிவிட்டதாக விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காவிரி தண்ணீர் கடைமடைக்கு வரும் என்று நம்பி குறுவை பயிரிட்ட பெண் விவசாயி ஒருவர் தலையில் கைவைத்துக் கொண்டு கண்ணீர் விடும் சோக காட்சிகள் தான் இவை..!

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட போதிலும் கடைமடைப்பகுதியான நாகப்பட்டின மாவட்டம் ஆதமங்கலம், கீரங்குடி, வடமருதூர், தென்மருதூர் , ராமச்சந்திரபுரம், கீழக்கண்ணாப்பூர், செம்பேனேரி, உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீர் சரிவர சென்று சேரவில்லை என்று கூறப்படுகின்றது. முதல் அமைச்சர் வருகையின் போது பாசனவாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட்ட அதிகாரிகள் அதன் பின்னர் தண்ணீரை நிறுத்திவிட்டதால் தாங்கள் பயிரிட்ட குறுவை சாகுபடி பயிர்கள் கருகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்

ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவழித்து பயிர் செய்ததாகவும், அந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில்லாமல் தற்போது கருகிபோய் விட்டதாகவும், அரசு தகுந்த இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்

இதுவரை அமைச்சர்களோ, அதிகாரிகளோ குறுவை பயிர் சாகுபடி கருகி வீணாகி இருப்பதை கண்டுகொள்ளவில்லை என்றும் கால்வாய் ஓரம் இருக்கும் ஒரு சில விளை நிலங்களை மட்டும் பார்யையிட்ட அதிகாரிகள் பசுமையாக இருப்பதாக கூறிச்சென்றுவிட்டதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனர்

திருத்துறைப்பூண்டி பகுதிக்குட்பட்ட கிராமங்களிலும் பல இடங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் வராமல் குறுவை பயிர்கள் கருகிவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்

கர்நாடக அரசிடம் இருந்து காவிரி தண்ணீர் பெற்று தருவதோடு, கடைமடை பகுதியை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக பாசன கால்வாய் மற்றும் வாய்கால்கள் முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement