செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வெண்டைக்காய்களை மூட்டை மூட்டையாக ஏரியில் கொட்டிய வியாபாரி..! விவசாயிகளுக்கு பணம் கொடுத்து விடுவேன்

Sep 02, 2023 08:30:36 AM

விவசாயிகளிடம் வெண்டைக்காயை கிலோ ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கி பெங்களூருக்கு அனுப்ப இருந்த நிலையில், அங்கு விலை கடுமையான வீழ்ச்சி அடைந்ததால், 2 டன் வெண்டைக்காய்களை மீன்களுக்கு உணவாக ஏரியில் கொட்டிய சம்பவம் திருப்பத்தூரில் அரங்கேறி உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒருகிலோ வெண்டைக்காய் 7 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை விலைவைத்து விற்கப்படும் நிலையில், பெங்களூரு மார்க்கெட்டில் விலை வீழ்ச்சி அடைந்து விட்டதாக கூறி திருப்பத்தூரை சேர்ந்த வியாபாரி ஒருவர் மூட்டை மூட்டையாக வெண்டைக்காய்களை ஏரியில் கொட்டும் காட்சிகள் தான் இவை..!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மாணவள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சுற்றியுள்ள விவசாயிகளிடம் வெண்டைக்காயை வாங்கி சென்னை, பெங்களூர், கேரளா, உள்ளிட்ட மார்க்கெட்களில் விற்பனை செய்து வருகிறார். சில வாரங்களாக விலை மிகவும் வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக விவசாயிகளிடம் வாங்கப்பட்ட சுமார் 2 டன் வெண்டைக்காயை கந்திலி அருகே உள்ள கள்ளேரி ஏரியில் கொட்டினார்.

மார்க்கெட்டில் தற்போது வெண்டைக்காயின் விலை கிலோ 2 ரூபாய் என மிகவும் குறைந்துள்ளதால் எந்த மார்க்கெட்டிலும் விற்க முடியாத சூழ்நிலை உள்ளது.

விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளிடம் தற்போது வெண்டைக்காயை வாங்காமல் போனால் அடுத்த முறை பயிரிடும் எந்த ஒரு காய்கறிகளையும் வியாபாரிகள் கொடுக்க மாட்டார்கள் என்று தெரிவித்த ரமேஷ், விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ வெண்டைக்காய் இரண்டு ரூபாய் என வாங்கி நட்டத்திற்கு தங்களால் விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஏரியில் வீசியதாகவும் இதன் காரணமாக தனக்கு மட்டும் ஒரு லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆதங்கம் தெரிவித்தார்.

தக்காளியால் லட்சாதிபதியான வியாபாரிகள் வெண்டைக்காயால் பணத்தை இழந்து வருகின்றனர்.

 


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement