செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கோவை சிலிண்டர் வெடிப்பு சத்தியமங்கலம் காட்டில் கூடிய ஐ.எஸ். பயங்கரவாத கோஷ்டி..! புழல் சிறையில் முக்கிய குற்றவாளி

Sep 02, 2023 07:22:34 AM

கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு வழக்கில் ஐ.எஸ். பயங்கரவாதி அசாருதீனை திருச்சூர் சிறையில் இருந்து கைது செய்துள்ள என்.ஐ.ஏ , அவரை காவலில் எடுத்து விசாரிக்க வசதியாக புழல் சிறையில் அடைத்தனர். ஈஸ்டரை தொடர்ந்து கோவையில் நாச வேலைக்கு சத்தியமங்கலம் காட்டில் கூடிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

கோவையில் நடந்த கார் சிலிண்டர் குண்டு வெடிப்பில் நாச வேலைக்கு திட்டமிட்ட ஜமேஷா முபின் என்பவர் பலியான நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ அதிகாரிகள் , நாசவேலைக்கு சதி செய்த 13 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் குண்டு வெடிப்பிற்கு முன்பாக ஜமேஷாமுபின் கூட்டாளி பெரோஸ் இஸ்மாயில் உள்ளிட்ட 3 பேர் ,கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த வையூர் சிறைக்கு சென்று , அங்கு அடைக்கப்பட்டுள்ள ஐ.ஏஸ். பயங்கரவாதியான அசாரூதீனை சந்தித்து வந்தது தெரியவந்தது.

ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்ற அசாரூதின், கேரள போலீசில் சிக்குவதற்கு முன்னதாக இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி என்று சுட்டிக்காட்டிய என்.ஐ.ஏ அதிகாரிகள், அசாரூதீனை குருவாக ஏற்று பயான் வகுப்புகளுக்கு ஜமேஷா முபின் கூட்டாளிகளுடன் சென்று வந்ததாகவும், சத்தியமங்கலம் காட்டில் ஒன்று கூடி , இலங்கை போலவே கேரளா மற்றும் தமிழகத்திலும், நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டியதாக தெரிவித்தனர் . இதற்கிடையே அசாரூதீன் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு வையூர் சிறையில் அடைக்கப்பட்டதால். அந்த சிறையை தகர்த்து அசாரூதீனை மீட்கவும் இந்த குழு திட்டமிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அசாரூதினை , கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள், 11 ந்தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement