செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பழரசமா... பழவிஷமா.. லெமனா.. உயிருக்கு எமனா.. குப்பையில் கொட்டிய அதிகாரிகள்..!

Aug 29, 2023 08:20:34 AM

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். புற்றுநோயை உண்டாக்கும் ரசாயண சுவையூட்டிகள் கலந்த பழரசம் மற்றும் லெமன் ஜூஸை லிட்டர் கணக்கில் பறிமுதல் செய்து, குப்பையில் கொட்டி அழித்தனர்

வெயிலுக்கு இதமாக இருக்கும் என்று நம்பி வாங்கி அருந்தும் பழரசம் மற்றும் லெமன் ஜூஸில் ரசாயண நிற மற்றும் சுவையூட்டிகள் கலப்பதால் , அவற்றை குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று எச்சரித்து அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் தான் இவை..!

கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் சுகந்தன் தலைமையில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் கச்சேரி ரோடு ,சேலம் ரோடு , துருகம் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளிலும் உணவகங்களிலும் திடீர் ஆய்வு மேற்க்கொண்டனர்.

இந்த ஆய்வில் அதிக செயற்கை நிற மூட்டிய பழச்சாறு , லெமன் ஜூஸ் உள்ளிட்ட 75 லிட்டர் குளிர்பானத்தை கைப்பற்றி குப்பை தொட்டியில் கொட்டி அழித்தனர்

காலாவதியான உற்பத்தி தேதி, காலாவதி தேதி குறிப்பிடாத நொறுக்கு தீனிவகைகள் 195 கிலோ, கார வகைகள் 49 கிலோ, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் 25கிலோ , பயன்படுத்த கூடாத நிலையில் உள்ள 20 லிட்டர் குடிநீர் கேன்கள் 24 ஆகியவற்றை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது

சுகாதாரமற்ற நிலையிலும் உரிமம் புதுப்பிக்காமலும் பிளாஸ்டிக் நெகிழிகளை பயன்படுத்திய 2 உணவகங்களுக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 4 கடைகளுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 11 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதிக நிறமூட்டிய குளிர்பானம் எலுமிச்சை பழமே கலக்காமல் லெமன் பவுடரை கலந்து விற்பனை செய்வது அதனை அருந்துபவர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என்று கடைக்காரர்களை எச்சரித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் இது போன்று சுழற்சி முறையில் அதிகாரிகள் சோதனை செய்து நுகர்வோருக்கு தரமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement