செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் லக்னோ கொண்டு செல்லப்பட்டன.. !!

Aug 27, 2023 06:12:25 PM

மதுரை ரயில்பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து லக்னோ கொண்டு செல்லப்பட்டன.

முன்னதாக மதுரையில் 9 பேரின் உடல்களுக்கும் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட உடல்களோடு, ரயிலில் பயணம் மேற்கொண்ட 14 பேர் சென்றனர். மீதமுள்ள 41 பேர் மதுரையிலிருந்து விமானம் மூலம் லக்னோ அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே விபத்து நிகழ்ந்த பெட்டியில் இரண்டாவது நாளாக தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், ட்ரங்க் பெட்டி ஒன்றிலிருந்து கருகிய நிலையில் கட்டுக்கட்டாக 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

தெற்கு வட்டார ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினரும் பெட்டியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது ஒருபுறமிருக்க, ரயிலில் வந்தவர்களில் 5 பேர் எண்ணிக்கையில் குறைந்ததால், அவர்கள் குறித்து விசாரித்தபோது, வேறு ரயில் பிடித்து லக்னோ செல்ல முயன்றது தெரியவந்தது.

அவர்களில் பிளாட்பார்மில் சுற்றித் திரிந்த 3 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மீதமுள்ள இரண்டு பேர் ரயிலில் சொந்த ஊர் சென்றிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement