செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வழிப்பறி புகாரை விசாரிக்கச் சென்ற காவலரை கத்தி முனையில் விரட்டிய கஞ்சா கும்பல்.. 2 சிறார் உள்பட 5 பேர் கைது.. !!

Aug 22, 2023 07:48:40 PM

சென்னை புறநகரான பூவிருந்தவல்லியை அடுத்துள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் பட்டப்பகலில் நடுத்தெருவில் கையில் கத்தியுடன் போலீஸ்காரர் ஒருவரையே கஞ்சா போதை கும்பல் விரட்டிச் சென்றனர். போலீசுக்கே இந்த கதி என்ற அளவுக்கு பூவிருந்தவல்லி பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், பகலில் கூட தங்களால் சாலைகளில் அச்சமின்றி நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டுப்பாக்கம் பகுதியில் கோயில் திருவிழாவில் பங்கேற்கச் சென்ற திருமாவளவன் என்பவரை ஒரு கும்பல் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி கத்தியால் கையில் வெட்டியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த அவர் கட்டுப்பாட்டு எண் 100-ஐ தொடர்புக் கொண்டு புகார் அளித்தார். அதன்பேரில், காவலர் சரவணன் அங்கு சென்று விசாரித்துள்ளார்.

அப்போது, கஞ்சா புகைத்திருந்த சிலர் தங்கள் கையில் வைத்திருந்த கத்தியால் காவலர் சரவணனை குத்த முயற்சித்ததாகவும், அவர் லத்தியுடன் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

கஞ்சா போதையில் காட்டுப்பாக்கம் பகுதியில் சுற்றும் இது போன்ற நபர்கள் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள பொதுமக்கள், அன்றைய ஒரே தினத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியரையும் கஞ்சா கும்பல் தாக்கியதாக கூறியுள்ளனர்.

தப்பிச் சென்ற போலீஸ்காரர் சரவணன், தம்மை கத்தியுடன் விரட்டியது தொடர்பாக கஞ்சா கும்பல் மீது புகார் எதையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பொது மக்களின் புகாரின் பேரில் பூவிருந்தவல்லி போலீஸார் சபரி, சந்தோஷ், சூர்யா மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 2 பேரை கைது செய்தனர்.

கஞ்சா புழக்கத்தை தடுக்க போலீசார் உறுதியான நடவடிக்கை எடுக்காததால் தான் கஞ்சா போதை கும்பலின் அட்டகாசம் பூவிருந்தவல்லி பகுதியில் தொடர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement