செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உலக நியாயம் பேசுவாரே.. அதே பிரகாஷ்ராஜ் தான் இப்படியெல்லாம் செய்தாராம்..! பாபி சிம்ஹா உனக்கு மச்சம்யா..!

Aug 22, 2023 07:24:59 AM

கொடைக்கானலில் நடிகர் பிரகாஷ்ராஜ், கிராம சாலையை ஆக்கிரமித்து தனது ரிசார்ட்டுக்கு செல்வதற் தனியாக சாலை அமைத்து கொண்டுள்ளதாகவும், விதிகளை மீறி 3 மாடி பங்களா கட்டுவதற்கு நடிகர் பாபிசிம்ஹாவிற்கு அனுமதி வழங்கியது எப்படி எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 குளுகுளு பிரதேசமான கொடைக்கானலில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிமென்ட் சாலை வனத்துறையின் இடத்தை ஆக்கிரமித்து பிரபல நடிகரான பிரகாஷ்ராஜே பிரத்யேகமாக அமைத்துக் கொண்டது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இந்தியா நிலவிற்கு அனுப்பிய சந்திரயான் விண்கலத்தை கிண்டல் செய்து டிவிட்டரில் பதிவிட்டு நெட்டிசன்களின் கண்டனத்திற்கு உள்ளான நடிகர் பிரகாஷ்ராஜ், கொடைக்கானல் மலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனது வில்லத்தனத்தை காட்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பேத்துப்பாறை பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பிரகாஷ்ராஜ் எப்படி சிமென்ட் சாலை அமைக்க முடியும்? இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. விவசாய பணிக்கு ஜேசிபி வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்காத மாவட்ட நிர்வாகம் பிரகாஷ்ராஜின் நிலத்தில் 25 நாட்களாக இரண்டு கனரக வாகனங்கள் இயங்குவதற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள் ? எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

அரசு இடத்தில் அமைக்கப்பட்ட பாதையை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என பிரகாஷ்ராஜ் போர்டு வைத்ததாகவும், மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த போர்டு அகற்றப்பட்டதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

சாதாரணமாக ஒரு கம்பை நட்டி குடிசை அமைத்தாலே நடவடிக்கை எடுத்து விடும் வனத்துறையினர் அரசு தரிசு நிலத்தில் நடிகர் பாபிசிம்ஹா 3 மாடி பங்களா கட்டி வருவதை ஏன் கண்டுகொள்ளவில்லையென கேள்வி எழுப்பி உள்ளனர் பொதுமக்கள்.

இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை தனிப்பட்டவர்களின் நலனுக்காக பாழ்படுத்தாமல், பாதுகாக்க வேண்டிய கடமையை அரசு அதிகாரிகள் செய்ய வேண்டும் என்பதே அப்பகுதியினரின் விருப்பம்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement