செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மரணித்தும் வாழும் விவசாயி.. கணவனின் கடைசி ஆசையை கடமையாக நிறைவேற்றிய மனைவி...! மரித்தாலும் பிறருக்கு பார்வையை வழங்கலாமே..

Aug 20, 2023 10:21:26 AM

மரணித்த பிறகு மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது தீயில் எரிந்து சாம்பலாகி போகும் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 75 விவசாயி ஒருவர்.

47 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த கணவனின் இறப்பை மனதளவில் தாங்கிக் கொண்டு அவரது இறுதி ஆசையை நிறைவேற்றிய திருப்தியோடும், பிரிவை நினைத்து ஏங்கியும் அழும் இவர் தான் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சாந்தகுமாரி.!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலைச் சேர்ந்த 75 வயதான விவசாயி திருவேங்கடம், உடல் நலக்குறைவால் வெள்ளியன்று மாலையில் உயிரிழந்தார். இறப்பிற்கு பிறகு தனது கண்களை தானமாக வழங்க வேண்டும், உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்சிக்காக வழங்க வேண்டுமென குடும்பத்தினரிடம் விருப்பம் தெரிவித்து வந்துள்ளார் திருவேங்கடம். தனது நண்பரான லயன்ஸ் சங்க நிர்வாகி ஒருவரிடமும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார் திருவேங்கடம்.

இதனையடுத்து, இறப்பிற்கு பிறகு திருவேங்கடத்தின் கண்கள் 4 பேருக்கு பயனளிக்கும் வகையில் சென்னையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கும், உடல் வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினர் குடும்பத்தினர். அதற்கு முன்பாக தங்களது முறைப்படி இறுதி சடங்குகளையும் செய்து முடித்தனர் குடும்பத்தினர்.

2020ம் ஆண்டில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார் திருவேங்கடம். அப்போது, மருத்துவ மாணவர்களிடம் ஏற்பட்ட பழக்கத்தால், உடல் மற்றும் கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தனர் குடும்பத்தினர்.

இறப்பிற்கு பிறகு 10 பேருக்காவது பயன்படட்டும் என விவசாயி திருவேங்கடம் அடிக்கடி சொல்லி வந்ததாக தெரிவித்த குடும்பத்தினர். மற்றவர்களும் கண்தானம் செய்ய முன் வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இறப்பிற்கு பிறகும் வாழும் வகையிலும், மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் கண்கள் உள்ளிட்ட உடலுறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement