செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சோளக்காட்டு திகில்..! தானாக ஓடிய டிராக்டர் பெண் மீது ஏறி இறங்கியது..! 5 ரவுண்ட் சுற்றி நசுக்கியது

Aug 18, 2023 09:50:33 PM

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சோளக்காட்டிற்குள் ஆஃப் செய்யாமல் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்று தானாக ஓடி 5 முறை சுற்றி வந்தது. அப்போது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் நசுங்கி பலியானார்.

சோளக்காட்டுக்குள் தானாக ஓடிய டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான பெண்ணின் உறவினர்களது கதறல் தான் இவை..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சின்னகோட்டிமுளை கிராமத்தில் சம்பத் என்பவரின் விளை நிலத்தில் சோளம் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விவசாய கூலி தொழிலாளிகள் சோளக்கருது உடைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சம்பத் சோளக்கருது தட்டைகளை ஏற்றுவதற்காக டிராக்டரை கொண்டு வந்து நிறுத்தினார். டிராக்டரை ஆப் செய்யாமல நிறுத்தி விட்டு மரத்துக்கு அடியில் சென்று அமர்ந்திருந்த போது திடீரென நகர்ந்த டிராக்டர் தானாக ஓடத் துவங்கியது

சோளக்காட்டில் விவசாய பணியில் இருந்தவர்கள் மீது டிராக்டர் மோதியது. இதில் அன்பழகி என்ற பெண் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி நசுங்கினார். டிராக்டர் நிற்காமல் 5 முறை சுற்றி வட்டமிட்டது. டிராக்டரை நிறுத்துவதற்காக அதில் ஏற முயன்ற சம்பத்தின் லுங்கி பக்கவாட்டு கம்பியில் சிக்கிக் கொண்டதால் தவறி விழுந்த அவர் முன் சக்கரத்தில் சிக்கி காயம் அடைந்தார்

விவசாய பணிகளில் ஈடுபட்ட பெண்கள் அலறியடித்து ஓடினர். டிராக்டர் புகுந்து அழித்ததால் சோளக்காட்டின் ஒரு பகுதி வட்டமாக பாதை போல உருமாறியது

சோளக்குவியலில் சிக்கி ஒருவழியாக டிராக்டர் நின்ற பின்னர் பலியான அன்பழகியின் சடலத்தை மீட்டனர். தலை நசுங்கி காணப்பட்ட சடலத்தை கண்ட உறவினர்கள் கதறி அழுதனர்.

காயம் அடைந்த சம்பத், அமுதா, கோபிகா ஆகியோர் சிகிச்சைக்காக விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கம்மாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சோளத்தட்டைகளை டிராக்டரின் டிரய்லரில் போடச்சென்றவர்களின் கை தவறுதலாக பட்டு கியர் விழுந்து டிராக்டர் ஓடத்தொடங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


Advertisement
செங்கல்பட்டில் சாதிச் சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படுவதால் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
சிவகங்கையில் கைது செய்யப்பட்டவரின் காலை உடைத்ததாக புகார் - எஸ்.ஐ பணியிட மாற்றம்
ஈரோட்டில் தடகள வீராங்கனையை பின்தொடர்ந்து சென்று செல்போனை பறித்த 3 பேர் கைது
திருச்சியில் சிறுவன் மீது புல்லட் பைக்கை ஏற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன்
திருவாரூரில் தம்பியின் இறுதிச்சடங்கில் அக்காள் உயிரிழப்பு 6 பேர் காயம்
கடலூரில் போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில் இந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கைது
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement