செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நாலரை வருஷமா ஏன் வரலை...? என்னடா இது கரூர் எம்.பி ஜோதிமணிக்கு வந்த சோதனை..! வாக்காளர் கேள்வியால் வாக்குவாதம்

Aug 17, 2023 08:14:31 AM

கரூரில் எம்பி ஜோதிமணியை வழிமறித்த வாக்காளர் ஒருவர், தேர்தல் நேரம் வரும்போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகத்திற்கு வருமா?  எங்க ஊருக்கு நன்றி சொல்லக்கூட வராம நான்கரை வருஷம் எங்கே போயிருந்தீங்கன்னு கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

யாராக இருந்தாலும் நேருக்கு நேர் கேள்வி கேட்பதில் ஸ்பெசலிஸ்ட்டான ஜோதிமணி எம்.பியையே கேள்விகளால் திக்கு முக்காடச் செய்த வாக்காளர் இவர் தான்..!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட கந்தசாரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம், அந்த கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் வழிமறித்து கேள்வி கேட்க தொடங்கினார். தேர்தல் நேரம் வரும்போது மட்டும் தான் எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா? வாக்கு கேட்க மட்டுமே வருகிறீர்கள், அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களைப் பார்க்கவே முடியவில்லை, குறிப்பாக நன்றி கூட சொல்ல வரவில்லை என்று காட்டமாக கேள்வி கேட்டார்

தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் நன்றி தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறேன்... நீங்கள் வேண்டும் என்றே என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வந்தது போல் தெரிகிறது என கேள்வி கேட்ட நபரிடம் எம்பி ஜோதிமணி ஆவேசமாக பேசினார்.

எதையும் கண்டுகொள்ளாத அந்த நபர் தொடர்ந்து வாக்கு சேகரிக்க மட்டும் தான் வருகிறீர்கள் ஃபோன் செய்தால் ஒருமுறையாவது எடுத்து உள்ளீர்களா? எம்பி என்கின்ற முறையில் நாங்கள் யாரிடம் முறையிடுவது என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

கிராமசபைக் கூட்டத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் சூழ்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றியிருந்த பலரும் இதனை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். இது தொடர்பாக விளக்கம் அளித்த ஜோதிமணி எம்.பி, இரண்டரை மணி நேர கூட்டம் முடிந்தபிறகு தான் புறப்படும் நேரத்தில் மடக்கி கேள்வி கேட்டதாகவும், கேள்வி கேட்ட நபர் பாஜகவை சார்ந்தவர் என்றும், வீடியோ எடுத்தவர் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர் எனவும் தெரிவித்தார்


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement