செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மாணவிகளை கை, கால்களை அமுக்கி மசாஜ் செய்ய சொல்லி டார்ச்சர்... பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர், கிராம மக்கள் முற்றுகை

Aug 10, 2023 09:27:18 PM

மேட்டூர் அருகே, அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், 5ஆம் வகுப்பு மாணவிகளை, மசாஜ் செய்ய சொல்லி டார்ச்சர் செய்ததாக குற்றம்சாட்டி, ஊரே திரண்டு வந்து அரசு பள்ளியை முற்றுகையிட்டதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூரை அடுத்த கருங்கல்லூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 144 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் ராஜா என்பவர், 5ஆம் வகுப்பு மாணவியரை, தனது அறைக்கு அழைத்து, கை, கால்களை பிடித்து, அமுக்கிவிடச் சொல்லி டார்ச்சர் செய்வதாக கூறி, தங்கள் பெற்றோரிடம் மாணவிகள் கதறி அழுதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைத்த பெற்றோர்களும், கிராம மக்களும் ஒன்று திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர்.

அப்போது, பள்ளிக்கூட அறைக்குள் பதுங்கியிருந்த தலைமை ஆசிரியரை நோக்கி முன்னேறியவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தகவலறிந்து வந்த மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தணிகாச்சலம், தாசில்தார் முத்துராஜா, வட்டார கல்வி அலுவலர் சின்னராசு உள்ளிட்டோர், பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்...

பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையாத பெற்றோர் மற்றும் பொதுமக்கள், மேட்டூர்-மைசூர் சாலையில், மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மேட்டூர்-மைசூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு உள்ளும், புறமும், பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

 

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement