செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கு.! செப்.30க்குள் விசாரித்து முடிக்க உத்தரவு.! SIT விசாரிக்க உத்தரவிட நேரிடும் - உச்சநீதிமன்றம்

Aug 09, 2023 08:15:54 AM

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை,  செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற நேரிடும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணையை, 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு, ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணையை முடித்து அறிக்கைத் தாக்கல் செய்ய, 6 மாத காலம் அவகாசம் வழங்குமாறு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், அசாதுதீன் அமனுல்லா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மொத்தம் 6 பிரிவினரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதில் 2 பிரிவினரிடம் விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 3ஆவது பிரிவினரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அனைவரையும் விசாரித்து முடிக்கவும், வங்கி கணக்குகளை ஆராயவும் 6 மாத அவகாசம் வேண்டும் என்றார். கூடுதல் அவகாசம் வழங்க மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற உத்தரவை கொண்டு வழக்கை இழுத்தடிக்கப் பார்ப்பதாக, மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் கால அவகாசம் வழங்க வேண்டுமா ? வேண்டாமா? என்பதை மட்டுமே விசாரிப்பதாகவும், வழக்கின் வேறு கூடுதல் விவரங்கள் குறித்து விசாரிக்க போவதில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தை மட்டும் கூடுதலாக சேர்த்தால் போதுமானதே தவிர, மீண்டும் முதலில் இருந்து வாக்குமூலம் பெற்று வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதில்லை என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை தமிழ்நாடு டிஜிபி, உள்துறைச் செயலாளரிடம் கேட்டு அரை மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையேல், அவர்கள் இருவரையும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிப்போம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, செந்தில்பாலாஜி தொடர்புடைய வழக்கை விசாரிக்க 2 மாதங்களும், அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாதமும் என, 3 மாதம் கால அவகாசம் வழங்கும் வேண்டும் என சென்னை மத்திய குற்றப் பிரிவு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கை, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விசாரித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லையேல், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்றும் உத்தரவிட்டனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement