செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

புண்ணிய பூமி ராமேஸ்வரம்.. வடமாநில குற்றவாளிகளின் புகலிடமா..?

Aug 05, 2023 09:15:12 AM

பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ராமேஸ்வரத்தில் தங்கும் விடுதிகளில் பதுங்கிச் செல்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

வடமாநில குற்றவாளிகளின் புகலிடமாக அங்குள்ள தங்கும் விடுதிகள் மாறி வருவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

மக்கள் திரளாகக் காட்சியளிக்கும் இந்த இடம் ராமேஸ்வரம்! நாள்தோறும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் நூற்றுக்கணக்கானோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பிற மாநிலங்களில் கொடூர குற்றச் செயல்களை செய்துவிட்டு போலீசிடமிருந்து தப்ப நினைக்கும் பலர் இங்கு வந்துவிடுவதாகக் கூறுகின்றனர் போலீசார்...

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூன்று கொலைகளைச் செய்த மண்டு சர்மா, கோவிந்த் குமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில், அவர்கள் ராமேஸ்வரத்தில் பதுங்கி இருப்பது செல்போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது. தனியார் விடுதியில் தங்கியிருந்த இருவரையும் உள்ளூர் போலீசார் உதவியுடன் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பீகாருக்கு அழைத்துச் சென்றனர்.

இதேபோல ஒடிசாவைச் சேர்ந்த பப்பு நாயக், சுமந்த், தாஸ் என்ற 3 வழிப்பறிக் கொள்ளையர்கள் தனியார் விடுதியில் இருப்பதை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்த அம்மாநில போலீசார் இங்கு வந்து மூவரையும் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் நூற்றுக்கணக்கான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வரும் நிலையில், ஒரு சில விடுதிகள் வாடிக்கையாளர்களின் விவரங்களை சரியாக சேகரிக்காமல் தங்க வைப்பதால் வட மாநிலக் குற்றவாளிகள் பதுங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

சில தங்கும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்றும், சந்தேகப்படும் வெளிமாநில நபர்கள் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்காமல் விடுவதாலும் சமீப காலமாக வடமாநில குற்றவாளிகளின் புகலிடமாக ராமேஸ்வரம் மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, வெளிமாநிலத்தவர்களை விடுதியில் அனுமதிக்கும்போது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அவர்களின் அடையாள அட்டைகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்து சரிபார்த்துக் கொள்ள வேண்டுமென தனியார் தங்கும் விடுதிகளை அறிவுறுத்துகின்றனர் காவல்துறையினர்...


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement