செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நீங்க அரசாங்கத்த நடத்த நாங்க தான் கெடச்சோமா? டார்கெட் வைத்து போலீஸ் ஃபைன்..! கொந்தளித்த வாடகை கார் ஓட்டுனர்கள்

Aug 02, 2023 08:34:22 AM

தென்மாவட்டங்களில் டார்கெட் வைத்து போலீசார் அபராதம் விதிப்பதால் தங்களால் வாடகை கார்களை இயக்க முடியவில்லை என்று தெற்கு மண்டல ஐ.ஜியை சந்தித்து ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் அபராதம் விதிக்கும் போலீசாரின் டார்கெட் வசூல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

தென் மாவட்டங்களில் கடந்த சிலவாரங்களாக போலீசார் டார்க்கெட் வைத்து வாடகை கார்களுக்கு கட்டாய அபராதம் விதித்து கறார் வசூல் செய்வதாக தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க்கிடம் புகார் அளித்த ஓட்டுனர்களின் ஆதங்க குரல் தான் இது..!

மாற்றத்தை நோக்கி டூரிஸ்ட் கேப் என்ற வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மதுரையில் ஐஜி அஸ்ராகார்க்கை சந்தித்து மனு அளித்தனர். கட்டாய அபராதம் விதிப்பது குறித்து உரிய அறிவுறுத்தல்களை காவல்துறையினருக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மதுரை , ராமநாதபுரம் , சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாடகை வாகன ஓட்டுனர்கள் , வாடிக்கையாளர்களுடன் தங்கள் கார்களில் வெளியூர்களுக்கு சுற்றுலாவுக்கு சவாரிக்கு செல்லும் பொழுது ஒவ்வரு மாவட்டங்களை கடந்து செல்லும் போதும் கண்ணாடியில் ஒட்டப்படும் கூலிங் ஸ்டிக்கருக்காக தலா 1000 ரூபாய் வீதம் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் அபராதம் என்ற பெயரில் மாவட்டம் தோறும் வசூல் செய்வதாக தெரிவித்தனர்

தங்களுக்கு மாதத்துக்கு இவ்வளவு அபராதம் வசூலிக்க வேண்டும் என்று டார்கெட் வைத்திருப்பதாக கூறி ஒவ்வொரு மாவட்ட போலீசாரும், வாடகை கார்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் தெரிவித்தனர்.

சில நேரங்களில் கார் ஓட்டுனருக்கு ஹெல்மெட் அணியவில்லை எனவும், தங்கள் கார் போகாத ஏதோ ஒரு இடத்தில் தாங்கள் விதியை மீறியதாக குறிப்பிட்டும் ஆன்லைன் அபராதம் விதிக்கும் அவலம் நடைபெறுகிறது என்று வேதனையுடன் தெரிவித்ததாகவும், ஐ.ஜி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்திருப்பதாகவும் கூறினர்.

 


Advertisement
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement