செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

விவசாயி தொடுத்த வழக்கில் என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நீதிபதியின் சரமாரி கேள்விகள்..!

Aug 01, 2023 05:18:32 PM

என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்துக்கு கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும், என்.எல்.சி. நிறுவனத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

வளையமாதேவி பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில், தனது நிலத்தை என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்தி 16 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதாக கூறியுள்ளார். 5 ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரிமையாளர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டுமென நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம் குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், எனவே தமது நிலத்தை தம்மிடம் மீண்டும் ஒப்படைக்க உத்தரவிடுமாறு கோரியுள்ளார். இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், விவசாயிகள் அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க செப்டம்பர் 15 வரை அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இழப்பீடு வழங்கிவிட்டு இத்தனை ஆண்டுகளாக நிலத்தை ஏன் சுவாதீனம் எடுக்கவில்லை என்று வினாவினார். சுவாதீனம் எடுக்காததால் தான் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர் என்று நீதிபதி தெரிவித்தார். அதற்கு பதிலளித்த என்.எல்.சி. தரப்பு வழக்கறிஞர், தங்களது நடவடிக்கையால் விவசாயிகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் பயிர்கள் சேதமடையவில்லை என்றும் கூறினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, பொக்லைன் மற்றும் புல்டோசர் இயந்திரம் மூலமாக பயிர்களை சேதப்படுத்தி இருப்பதை தான் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளில் பார்த்ததாகவும், எதுவுமே செய்யாவிட்டால் விவசாயிகள் எதற்காக போராட்டம் செய்கிறார்கள் என்றும் கூறினார்.

உடனே என்.எல்.சி. தரப்பு வழக்கறிஞர், கடந்த டிசம்பர் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயப்பணிகள் முடிந்து பொங்கலுக்குப் பிறகு நிலங்களை ஒப்படைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டதாக கூறினார். ஆனால் அதன்படி நடக்காமல் விவசாயிகள் மீண்டும் பயிர் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது கால்வாய் தோண்டும் பணி நடைபெறாவிட்டால் மழைக்காலங்களில் என்.எல்.சி. சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.

இதையடுத்து, அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைத்து விடுவீர்களா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, கையகப்படுத்திய பின் நிலத்தில் சாகுபடி செய்ய ஏன் அனுமதித்தீர்கள் என என்.எல்.சி. தரப்பையும் வினவினார். கையகப்படுத்திய நிலத்துக்கு வேலி அமைத்திருக்க வேண்டும் அல்லது ஆட்களை நியமித்து கண்காணித்திருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், என்.எல்.சி. தரப்புக்கும் உத்தரவிட்டார். கால்வாய் தோண்டும் பணியை தொடரலாம் என அனுமதித்த நீதிபதி, அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பதாக மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று கூறி வழக்கை வரும் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்...


Advertisement
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசு முத்திரையுடன் இருந்த முட்டைகள்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement