செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

86 வயதில் காலமானார் ‘தூரிகைகளின் வேந்தர்’ ஓவியர் மாருதி..!

Jul 28, 2023 11:03:09 AM

தமிழ் வார இதழ்களில் ஆயிரக்கணக்கான படங்களை வரைந்து புகழ்பெற்ற ஓவியர் மாருதி உடல் நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 86. ஓவியங்களுக்கு தூரிகையால் உயிர்கொடுத்த படைப்பாளியின் திறமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

தான் வரையும் ஒவ்வொரு ஓவியத்தின் கண்களுக்கும், தூரிகையால் உயிர்கொடுத்து, காண்போரின் உள்ளத்தை கனவை விதைக்கும் உன்னத படைப்பாளி புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட ஓவியர் ரங்கனாதன் என்கிற மாருதி..!

மாடர்ன் ஆர்ட் என்ற பெயரில் வர்ணங்களை சிதறவிட்டு புரியா ஓவியங்களை உலக ஓவியங்களாக கொண்டாடுவோர் மத்தியில், 1969 முதல் எளிய மக்களையும், ஒவ்வொரு வாசகரையும் கவரக்கூடிய ஜனரஞ்சகமான ஓவியங்களை நடமாடும் சிற்பங்களாக தமிழ் வார இதழ்களுக்கு வடித்துக் கொடுத்தவர் ஓவியர் மாருதி ..!

அந்த கால வாசகர்களுக்கும்... இடைக்கால வாசகர்களுக்கும்... எப்போதும் ஸ்பெசலாக கருதப்படும் 90 களின் குழந்தைகளுக்கும்... மாருதி தனது ஓவியங்களின் மூலம் பல கற்பனை தேவதைகளை ஓவியங்களாக உருவாக்கிக் கொடுத்தவர்

வார இதழ்களில் மாருதியின் ஓவியங்களால், பல கதைகளின் நாயகிகள் பேரழகு பெற்றனர் என்றால், பல தொடர் கதைகளை இவரது ஓவியங்கள் சினிமா பார்ப்பதற்கு இணையாக வாசகர்கள் மனதில் கொண்டு சேர்த்தது. இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது, ஓவியர்கள் சார்பாக அவருக்கு தூரிகைகளின் வேந்தர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கதைவசனம் எழுதிய உளியின் ஓசை மற்றும் பெண் சிங்கம் படங்களுக்கு ஆடைவடிவமைப்பாளராகவும் ஓவியர் மாருதி பணிபுரிந்துள்ளார்.

கடைசி வரை ஓவியம் வரைவதை விடாமல் தொடர்ந்து வந்த மாருதி, தனது 86 ஆவது வயதில் , புனேவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மறைந்தாலும் அவரது ஓவியங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் மாருதியின் பெயர் என்றென்றும் அவர் புகழை உலகெங்கும் கொண்டு சேர்க்கும்..!

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement