செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மதம் கடந்து காதல் திருமணம்.... விடிய, விடிய உறவினர்கள் போராட்டம் ...

Jul 24, 2023 08:09:42 AM

கடலூரில் மதம் கடந்து காதல் திருமணம் செய்துக் கொண்ட பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு உறவினர்கள் விடிய விடிய நடத்திய போராட்டத்தினால் பாதுகாப்பு கேட்டு எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர் புதுமண தம்பதி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வரும் விஜயபாஸ்கர், சவாரிக்குச் சென்ற இடத்தில் திருவதிகையைச் சேர்ந்த ஆயிஷா பேகத்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியது. காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு வந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய ஆயிஷா விழுப்புரத்தில் வைத்து விஜயபாஸ்கரை சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.

இதனை தெரிந்து கொண்ட ஆயிஷாவின் பெற்றோர் பண்ருட்டி காவல் நிலையத்திற்குச் சென்று மகளைக் காணவில்லை என புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்தி, புதுமண ஜோடியை தேடி கண்டுபிடித்து சனிக்கிழமை இரவில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பெண்ணின் தரப்பினர் அதிகளவில் திரண்டு வந்து திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர் போலீஸார். அப்போது, காதல் திருமணம் செய்து கொண்ட விஜயபாஸ்கர் உடனே தான் செல்வதாக தெரிவித்தார் ஆயிஷாபேகம்.

இருவரும் திருமண வயதை அடைந்திருந்ததால் அவர்களது முடிவே இறுதியானது எனத் தெரிவித்த போலீஸார் ஆயிஷாவை விஜயபாஸ்கருடன் அனுப்பி வைத்தனர்.

ஆனால், தங்களை ஆயிஷாவுடன் பேசுவதற்கு போலீஸார் குறைந்த நேரமே கொடுத்ததாகவும், கூடுதல் நேரம் கொடுத்திருந்தால் மகள் தங்களுடன் வந்திருப்பார் என பெற்றோர் ஆதங்கத்துடன் கூறினர்.

இதனையடுத்து, ஆயிஷாவின் பெற்றோருக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் திரண்டு இரவு 11 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்ணுடன் பேசுவதற்கு காலையில் ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது.

இந்தநிலையில், பண்ருட்டி காவல் நிலையம் சென்றால் பாதுகாப்பு இருக்காது எனக் கருதிய புதுமண ஜோடியினர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

தகவலறிந்த பெண்ணின் தரப்பினர் எஸ்.பி அலுவலகம் சென்று ஆயிஷாவுடன் பேச வேண்டுமென வலியுறுத்தினர்.

அங்கு ஒரு டி.எஸ்.பி தலைமையில் பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏறத்தாழ 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெண்ணின் உறவினர்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் ஆயிஷா தனது கணவருடன் செல்வதில் உறுதியாக இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர் .

இரவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது காவல் நிலையத்தில் வைத்தே தன்னுடைய கழுத்தை உறவினர்கள் நெரித்ததாக தெரிவித்த ஆயிஷா, தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

பேச்சுவார்த்தையின் முடிவில் ஆயிஷாவை அவரது கணவர் விஜயபாஸ்கருடன் பாதுகாப்பாக காரில் ஏற்றி போலீஸார் அனுப்பி வைத்தனர்.

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement