செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

முதியோர் ஓய்வூதியம், கைம்பெண் உதவித் தொகையை மாதம் 1200 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்.. !!

Jul 22, 2023 03:43:27 PM

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் முதியோர் மாத ஓய்வூதியம் மற்றும் கைம்பெண் உதவித் தொகையை மாதம் 1200 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக அமைச்சரவையின் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,

முதியோர் மாத ஓய்வூதியம் மற்றும் கைம்பெண் உதவித் தொகையை மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் முதல் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள 1 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கான உதவித் தொகையும் ஆயிரம் ரூபாய் இருந்து ஆயிரத்து 200 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர்,

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை 2 மாதங்களுக்கு முன்பே 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் பயனடைந்து வரும் 30 லட்சத்து 54 ஆயிரம் பேர் இந்த தொகை உயர்வு மூலம் பலன் பெறுவார்கள் என்று தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, காத்திருப்பு பட்டியலில் உள்ள 74 ஆயிரத்து 73 பேரில் தகுதியானோருக்கு  உதவித் தொகை வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்.

தொகை உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 845.91 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த ஒரு பயனாளியும் விடுபட்டு விடக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர், தமிழ்நாடு முழுவதும் 35, 925 முகாம்கள் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளதாக கூறினார்.

மகளிர் உரிமைத் தொகைக்காக இதுவரை ஏறத்தாழ 50 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement