செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எங்கள காப்பாத்துங்க... ரவுடிங்க மிரட்டுராங்க... ரூ.50 லட்சம் அம்மணி அழுகாச்சி..! மடக்கிப் பிடித்த பரபரப்பு சம்பவம்

Jul 22, 2023 09:02:54 AM

கோவை அழகு பார்மஸி உரிமையாளரிடம், 11 வருடங்களுக்கு முன்பு 50 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மடக்கிப்பிடித்தனர். போலீசில் சிக்காமல் தப்பிக்க தன்னை பிடித்தவரை ரவுடி என்றும் கொல்லப் போறாங்க என்றும் கூச்சலிட்டு நாடகமாடிய ஜோடி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு....

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் காரில் வந்த ஜோடி ஒன்று, தங்களை மடக்கிய முககவசம் அணிந்த நபரிடம் இருந்து காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.

அந்த ஆணும் பெண்ணும், தங்களை ரவுடிகள் மிரட்டுறாங்க என்று சொல்லி காரில் ஏறி தப்பிச்செல்ல முயல, அவர்களை மடக்கிய நபரோ, இவர்கள் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் என்றும் இவர்களை பிடிக்க போலீஸ் வருகிறது என்று கூறி கார் சாவியை பறித்துச்சென்றார்.

இதையடுத்து கண்ணீர் வராமல் அழுகாச்சி நாடகம் போட்ட பெண்மணியோ தன் பெயர் சுகுணா என்றும் தனது நிலத்தை சிலர் அபகரிக்க முயல்கிறார்கள் என்று புகார் அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தால், இப்படி நடக்குது பாருங்க... என்று ஆதங்க குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கோவை அழகு பார்மஸி உரிமையாளர் அழகு ஜெயபாலை பார்த்ததும், அண்ணா என்னாங்கன்னா இப்படி? என்று பம்மினார் அந்தப்பெண்... அவரை காருக்குள் அமருமாறு கூறியும் அவர் கேட்கவில்லை.

தொடர்ந்து உங்களுக்கு தரவேண்டிய பணத்தை நீதிமன்றத்தில் மணி சூட் போட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று அந்தப்பெண் திருவாய் மலர்ந்ததும், உண்மையில் அவர் ஏதோ பணத்தை ஏமாற்றி உள்ளார் என்பதை புரிந்து கொண்டு அங்கிருந்தவர்கள் அவர்களை தப்பிச்செல்ல விடாமல் சுற்றி வளைத்தனர்.

அதற்குள்ளாக அங்கு வந்த கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைக்க, இருவரும் செல்ல மறுத்து கோர்ட் ஆர்டர் காருக்குள் இருக்கு ... என்னோட கார் சாவி வேணும், சட்டைய எப்படி கிழிக்கலாம்..? என்று டிசைன் டிசைனான உருட்ட ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த போலீசார் , அவர்கள் இருவரையும் தள்ளிச்சென்று தங்கள் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

போலீசாரிடம் சிக்கிய சுகுணா, கடந்த 2012 ஆம் ஆண்டு பீளமேட்டில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதாக கூறி அழகு ஜெயபாலிடம் , 50 லட்சம் ரூபாய் முன் பணத்துக்கான காசோலை பெற்றுவிட்டு தலைமறைவானதாகவும், நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சுகுணாவை , அழகு ஜெயபாலின் உறவினர் பிடித்து போலீசில் ஒப்படைத்ததும் தெரியவந்தது.

அவர்கள் பிடியில் இருந்து தப்பிச்செல்வதற்காக , சுகுணாவும் அவருடன் வந்த நபரும், தங்களை ரவுடிகள் மிரட்டுவதாகவும் , கடத்த முயற்சிப்பதாகவும் அழுகாச்சி நாடகம் போட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement