செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற உள்ளூர் வாகன ஓட்டிகள் கோரிக்கை - தினமும் வாக்குவாதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு

Jul 19, 2023 11:28:04 AM

மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச் சாவடி நிர்வாகத்தினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோட்டாட்சியர் சாந்தி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

அப்போது, சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது திருமங்கலம் மதுரை சர்வீஸ் சாலையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டதன் பேரிலேயே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டதாகவும் இதனால் உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என பதில் கூறப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து உயரதிகாரிகளை கோட்டாட்சியர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உள்ளூர் வாகன ஓட்டிகள் 350 ரூபாய் செலுத்தி மாதாந்திர பாஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என உயரதிகாரிகள் கூறியதாக அவர் தெரிவித்தார். ஆனால் வாகன ஓட்டிகள் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிவுற்றது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement