செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நீங்கல்லாம் படிச்சி என்ன பிரயோசனம்... இப்படி ஏமாந்துட்டு நிக்கறீங்க..? 300 ஆசிரியைகளிடம் ரூ. 1.5 கோடி வசூல்

Jul 18, 2023 09:40:18 AM

அரசு உதவி பெறும் பள்ளியில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை வழங்குவதாகக் கூறி, 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு 300 ஆசிரியைகளை வீதியில் நிறுத்தியதாக, தூத்துக்குடி  நீம் அறக்கட்டளை நிறுவனரை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் நியாயம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீம் பவுண்டேசன்.... நம்மகிட்ட 50 ஆயிரம் ரூபாய் முன்பணமாக கொடுத்து சிறப்பு பயிற்சி பெற்றுக் கொண்டால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியராக மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கு பணி அமர்த்தப்படுவார்கள் என்று வாக்குறுதியை அள்ளிவீசி 300 ஆசிரியர்களிடம் ஒன்றரை கோடி ரூபாயை பெற்றதாக ஒப்புக் கொள்ளும் லூயிஸ் இவர்தான்..!

லூயிஸ் கடந்த ஆகஸ்ட் தொடங்கி ஒரு வருடமாக இந்த பவுண்டேசனை நடத்தி வருவதாகவும், பலருக்கு டிசம்பர் மாதம் வரை 15 ஆயிரம் ரூபாயை சம்பளமாக கொடுத்ததாகவும் அதன் பின்னர் எந்த ஒரு ஆசிரியைக்கும் சம்பளம் கொடுக்காமல் நிதிநிலை சரியில்லை என்று சாக்குப்போக்கு சொல்லி வருவதாக குற்றஞ்சாட்டிய ஆசிரியைகள் தங்கள் சம்பள பாக்கியையும், தாங்கள் கொடுத்த 50 ஆயிரம் ரூபாயையும் திருப்பிக்கேட்டு நீம் பவுண்டேசன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

முற்றுகையிட்ட ஆசிரியைகளிடம் பொறியில் சிக்கிய எலியாக சிக்கிக் கொண்ட லூயிஸையும் , அவரிடம் ஏமாந்த ஆசிரியைகளையும் ஒரு ஆசிரியையின் உறவினர் வார்த்தைகளால் விளாசி எடுத்தார்.

இதையடுத்து விளக்கம் அளித்த லூயிஸ், தங்கள் தொண்டு நிறுவனம் நிதி சிக்கலில் உள்ளதாகவும் , ஆகஸ்ட் 31 ந்தேதிக்குள் ஆசிரியைகளுக்கு பணம் திருப்பிக்கொடுக்கப்படும் என்று கூறினார்

வாக்குறுதியை பத்திரமாக எழுதி கையெழுத்துப் போட்டு தருமாறு கூறியதால் லூயிஸ் அனைத்து பத்திரங்களிலும் கையெழுத்துப் போட்டு கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.


Advertisement
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement