செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பாஜக மற்றும் திமுகவினரிடையே கடும் வாக்குவாதம்.. தேசிய கீதம் ஒலித்ததும் அமைதியான இரு கட்சியினர்

Jul 10, 2023 09:46:20 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரயில் நின்று செல்லும் விழாவின் போது பாஜக மற்றும் திமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு வரை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வராததால் ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் க.தேவராஜூம், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரையும் பேசும் போது, மேடையில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என பாஜகவினர் அதிகப்படியான சேர்களை போட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் இடப்பற்றாக்குறையைச் சுட்டிக் காட்டி திமுகவினர் மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பாஜகவினர் கோஷமிடத் தொடங்கினர். பதிலுக்கு திமுகவினர், எதிர் முழக்கமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் கூட்டம் முடிந்ததும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அடுத்த நொடியில் இரு கட்சியினரும் கட்டுக் கோப்பாக அமைதியாக நின்றனர்.

கொள்கை ரீதியாக எதிர் எதிர் முகாம்களில் இருந்தாலும் தேசம் என்றவுடன் இரு சாராரும் அமைதி காத்தது பார்த்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement