செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சினிமாவில் நடிப்பதற்காக ரூ.12 லட்சம் வழிப்பறி செய்த ஹீரோயின் இன்ஸ்பெக்டர்...! யாருடைய பணம் என்பது தான் டுவிஸ்ட்!!

Jul 09, 2023 08:59:13 AM

வாகன சோதனையின் போது புரோக்கரை மிரட்டி 12 லட்சம் ரூபாயை பறித்த பெண் காவல் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர். கடற்படை அதிகாரிகளின் கருப்பு பணத்தை கச்சிதமாக கறந்த திருட்டு ஹீரோயின் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

ஹீரோயின் போல ஜோடி போட்டு நடனம் ஆடும் இவர் தான் காவல்ஆய்வாளர் ஸ்வர்ணலதா .!

விசாகப்பட்டினம் ஆயுதப்படை காவல் ஆய்வாளரான ஸ்வர்ணலதா வாகன தணிக்கை ஒன்றின் போது காரில் கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகளுடன் வந்த சூரிபாபு என்பவரை மடக்கினார். விசாரணையில் சூரிபாபு, 10 சதவீத கமிஷன் அடிப்படையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, 500 ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொடுக்கும் புரோக்கர் என்பதும், காரில் இருந்த 90 லட்சம் பணத்தை, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகளான ஸ்ரீனு, ஸ்ரீதர் ஆகியோருக்கு மாற்றிக் கொடுக்க எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

தனக்கு 20 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் மொத்த பணத்தையும் பறிமுதல் செய்யப் போவதாகவும் ஸ்வர்ணலதா மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் பேரம் பேசி 12 லட்சம் ரூபாயை ஸ்வர்ணலதாவிடம் கொடுத்து விட்டு மீதி பணத்தை ஸ்ரீனு மற்றும் ஸ்ரீதரிடம் ஒப்படைத்துள்ளார் சூரிபாபு. பணத்தை இழந்த கடற்படை அதிகாரிகள் இருவரும் விசாகப்பட்டினம் காவல் ஆணையர் விக்கிரமாவை சந்தித்து ரகசியமாக புகார் அளித்தனர்.

விசாரணையில், ஸ்வர்ணலதா 12 லட்சம் ரூபாய் ஆட்டைப் போட்டது உறுதியானது. இதனையடுத்து, ஸ்வர்ணலதா, புரோக்கர் சூரிபாபு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஏ.பி 31 என்ற திரைப்படத்தில் ஸ்வர்ணலதா இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து வருவது தெரிய வந்தது. அதற்காக நடன பயிற்சியாளருடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவும் சிக்கியது

அந்த படத் தயாரிப்பில் ஸ்வர்ணலதா பங்குதாரராக உள்ளதால், அதற்காகவே மிரட்டி பணம் பறித்தாக போலீஸார் தெரிவித்தனர்.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement