செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

களத்தில் குதித்தது கூட்டுறவுத்துறை.. ஒரு க்ளிக் செய்தால் வீட்டிற்கே வரும் மளிகைப் பொருள்.. களத்தில் டஃப் கொடுக்குமா Co-OP BAZAAR...?

Jul 07, 2023 08:15:46 AM

ஆர்டர் செய்தால் 64 வகையான மளிகைப் பொருட்களை வீடு தேடி வந்து டெலிவரி செய்யும் வசதியை தமிழக கூட்டுறவுத்துறை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக கூட்டுறவு சந்தை என்ற பெயரில் மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

மொபைல் போனில் ஒரு க்ளிக் செய்தாலே உணவு, மளிகை, மருந்து மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவைகள் வீட்டின் கதவைத் தட்டி வந்து சேருகின்றன. தனியார்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த களத்தில், தமிழக கூட்டுறவுத் துறையும் தற்போது குதித்துள்ளது.

மசாலா பொடி வகைகள், எண்ணெய், பருப்பு வகைகள், உயிரி உரங்கள் என 64 வகையான பொருட்கள் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் வகையிலான "கூட்டுறவு சந்தை" எனப்படும் Co-OP BAZAAR செயலியை சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன்.

திருச்செங்கோடு, ஈரோடு, பெருந்துறை, சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, காஞ்சிபுரம், கொல்லிமலை, சத்தியமங்கலம் ஆகிய 8 கூட்டுறவு சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படும் 64 வகையான பொருட்கள் இந்த செயலியில் சந்தைப்படுத்தப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ள விலையை விட கூட்டுறவுத் துறை செயலியில் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, தனியார் நிறுவனங்களில் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 270 முதல் 300 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் நிலையில் தாங்களோ 240 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர் கூட்டுறவுத்துறை அதிகாரிகள்.

தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் ஆர்டர் செய்யும் வகையில் இந்த Co-OP BAZAAR செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எந்த பகுதிக்கு டெலிவரி செய்ய வேண்டுமோ அதற்கு அருகாமையில் உள்ள பல்வேறு வகையான கூட்டுறவு விற்பனை நிலையங்களிலிருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்படும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை குறைவு தான், ஆனால் டெலிவரி சார்ஜ் அதிகமாக உள்ளதே என்ற கேள்விக்கு கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெகநாதன் விளக்கம் அளித்தார்.

படிப்படியாக பொருட்களின் எண்ணிக்கையும் அவற்றை விநியோகிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க உள்ளதாகவும் மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் கூட்டுறவுத் துறை அமைச்சர்.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement