செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அண்ணா... என்னைய திருடன்னு மட்டும் திரும்ப சொல்லாதீங்க... ஒரு வண்டி திருடரின் ஆதங்கம்.. திருட்டு ராசாவுக்கு கோபமெல்லாம் வருது..!

Jul 06, 2023 07:34:41 PM

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து , இரு சக்கரவாகனம் ஒன்றை அபேஸ் செய்த ஆசாமி, அந்த வண்டிக்கு கோவிலில் பூஜை போட்டுவிட்டு, மெக்கானிக் கடையில் கொடுத்து பழுது பார்த்த போது கையும் களவுமாக உரிமையாளரிடமே சிக்கினார்...

திருடிய பைக்குடன் கையும் களவுமாக சிக்கிய நிலையில், தன்னை திருடன் என்று சொல்லாதீர்கள் என்று வாகன உரிமையாளரிடம் உருத்தாக உரிமைக்குரல் எழுப்பும் இவர் தான் வினோத திருடர் ராஜா ..!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நண்பரை பார்க்க சென்ற பாலு என்பவரின் பழைய இரு சக்கரவாகனத்தை மர்ம ஆசாமி திருடிச்சென்ற நிலையில் பாலுவின் நண்பர் தேடிச்சென்ற சில மணி நேரத்தில் அந்தப்பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் பாலுவின் வண்டியுடன் இந்த காக்கி பேண்டு சட்டை போட்ட மன்னார் பாளையம் ராஜா கையும் களவுமாக சிக்கி உள்ளார் . வண்டியை தான் திருட வில்லை என்றும் தனது நண்பர் எடுத்து தந்ததாகவும் கூறி சமாளித்தார்.

வண்டியை திருடிச்சென்ற கையோடு கோவிலில் சென்று பூஜை போட்டதாகவும், வழியில் வண்டி மக்கர் செய்ததால் ஒர்க் ஷாப்புக்கு கொண்டு வந்து சரி பார்த்துக் கொண்டிருந்த போது ராஜா சிக்கியதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் வண்டியை தான் திருடவில்லை என்று கூறிய ராஜா, தன்னுடைய கூட்டாளி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தான் ஒரு சர்வதேச உத்தமர் போல பேசி உதார் விட்டார்.

செவ்வாய் பேட்டை லாரி ஸ்டேண்டில் பழக்கமான நண்பர் கொடுத்த வண்டியால் தான் சிக்கிக் கொண்டதாக கூறி தலையில் கைவைத்து அமர்ந்தார் அந்த ரோசக்கார திருடர்.

அந்த பழைய இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரோ, நம்ம வண்டிய நம்மள தவிர யாரும் ஓட்ட முடியாது... அப்படி இருக்க யாரு திருடிட்டு போயிருப்பான்னு பார்த்தா... இதை திருடுறதுக்கும் ஆள் இருக்கு என்று வியப்புடன் தெரிவித்தார்.

திருட்டு வண்டியுடன் சிக்கிய ராஜாவை பிடித்து கூட்டாளி குறித்து விசாரித்து வரும் போலீசார், பழைய வண்டி இல்ல இத்து போன இரும்ப கூட திருட பல பேரு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் மக்களே உஷாரா இருங்க என்று எச்சரிக்கின்றனர்.

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement