செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆராரோ.. ஆரிரரோ...! அமைச்சர் பேசறாரோ... அதிகாரிகள் தூங்குறாரோ..! அவ்வளவு பணிச்சுமையாம் மக்களே..!

Jul 05, 2023 12:29:21 PM

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியபோது , எம்.எல்.ஏ, காவல் கண்காணிப்பாளர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பலர்  தூங்கி வழிந்த சம்பவம்  அரங்கேறி உள்ளது.

ஆய்வுக்கூட்டம் ஒன்றில் அமைச்சரின் பேச்சைக்கேட்டு அதிகாரிகள் அயர்ந்து தூங்கி வலிந்த காட்சிகள் தான் இவை..!

திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சக்கரபாணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தங்கள் பகுதியில் பெரும்பாலான சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மக்கள், போக்குவரத்து நெரிசல்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ வேலு , தமிழ்நாட்டில் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் அமைத்தல் போன்றவற்றால் ஏற்ப்படும் போக்குவரத்து நெரிசலை அதிகாரிகளைக் கொண்டு சரி செய்து வருவதாக தெரிவித்து கொண்டிருந்தார். அப்போது அதிகாரிகள் சிலர், அமைச்சரின் உரையை, தாலாட்டு என்று நினைத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாரிகள் தான் இப்படி என்றால் அதற்கும் ஒரு படி மேலாக மேடையிலே அமைச்சர்களோடு அமர்ந்திருந்த வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜனும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனும் மாயக்கண்ணன் போல மேடையிலேயே தூங்கி வழிந்தனர்.

விபத்துக்களை தடுப்பது குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் அயர்ந்து தூங்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement