செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அந்த 3 நாட்கள் பெண்கள் வீட்டுக்குள் இருந்தாலே தீட்டாம்.. வீதியில் சாப்பாடு... தங்குவதற்கு தனி இடம்..!

Jul 04, 2023 08:07:32 PM

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள போதகப்பட்டி கிராமத்தில் மாதவிடாய் வந்த பெண்களை வீட்டை விட்டு வெளியேற்றி வீதியில் வைத்து உணவு வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. 

மாதவிடாய் பிரச்சனை பற்றி பேச மறந்துவிட்டதன் விளைவு, அதனை தீட்டு என்று கூறி வீட்டில் இருந்து வெளியேற்றி வீதியில் அமரவைத்து உணவளிக்கப்படும் காட்சிகள் தான் இவை..!

அந்தப்பெண் வீதியில் அமரவைக்கப்பட்டிருப்பது கண்ணுக்கு தெரியவில்லை... அசைவ உணவு வழங்கப்படுவதை மட்டும் சக பெண் பெருமையாக கூறுவது, வெட்கி தலைகுனியவேண்டிய விஷயம்..! என்று இந்த வீடியோவை பதிவு செய்த பெண்ணுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர் பெண்ணிய சிந்தனையாளர்கள்.

கடந்த 2007 - 2008 ஆம் ஆண்டு மதவிடாய் பெண்களை ஒதுக்கி வைப்பதற்கு என்று பல்னோக்கு கட்டிடம் என்ற பெயரில் தமிழக அரசின் நிதியில் தனிக் கட்டிடமே கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி தான், அதனை திறந்து வைத்ததாகவும் அங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கின்றனர்.

போதகப்பட்டியில் வசித்து வரும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த 55 குடும்பத்தினர் தங்கள் வீட்டுப்பெண்களை அந்த 3 நாட்களும் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டை தாங்கள் கோவிலாக கருதுவதாலும், மாதம் முழுவதும் வேலையில் மூழ்கி கிடக்கும் பெண்களுக்கு 3 நாட்கள் ஓய்வு அளிப்பதற்காகவுமே மாதவிடாய் வந்த பெண்களை அந்த தனி கட்டிடத்தில் தங்க வைத்து உணவளிப்பதாகவும், அவர்களை ஊரைவிட்டு தள்ளிவைக்கவோ, ஒதுக்கவோ இல்லை என்று மறுப்பு தெரிவிக்கிறார் அந்த கிராமத்தை சேர்ந்த சக்திவேல்.

இதே நடைமுறை போதகாப்பட்டி மட்டுமில்லாமல் போடிநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி, ராமநாயக்கன்பட்டி, உள்ளிட்டகிராமங்களிலும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement