மேகதாதுவில் அணை கட்டுவது என்பது ஒருபோதும் நடக்காது என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்திற்கான நீரை கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும் என அப்போது அவர் வலியுறுத்தினார்.