செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பாடையை வைத்து பாடம் சொன்ன இளைஞர்படை..! சடலத்துடன் சாலை மறியல்

Jul 01, 2023 01:00:14 PM

பட்டா நிலம் வழியாக சடலத்தை தூக்கிச்செல்ல வழி மறுக்கப்பட்டதால், சடலத்துடன் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 85 வயது மூதாட்டியின் உடலை ஆயுதமாக்கி நடந்த உரிமைப் போராட்டம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..

அந்த சாதிக்காரங்க சடலம் எங்க நிலத்து வழியாக போகக்கூடாது... என்று இந்த சாதிக்காரங்க மறித்ததால், தங்களுக்கான உரிமைக்காக இளைஞர்கள் முன்னெடுத்த போராட்ட காட்சிகள் தான் இவை..!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கிருஷ்ணாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 85வயதான லட்சுமம்மா என்பவர் வயதுமூப்பால் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை அடக்கம் செய்வதறகாக உறவினர்கள் தூக்கிச்சென்றபோது, வழக்கமாக செல்லும் பட்டா நிலத்தைச் சுற்றி கல் நட்டு கம்பிவேலி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தாங்கள் வேலியை அகற்றிவிட்டு அந்த வழியாகத்தான் போவோம் என்று ஒரு தரப்பினர் சொல்ல , பட்டா நிலத்துக்குள் சடலத்தை அனுமதிக்க மற்றொரு தரப்பு மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது

இருவரும் வேறு வேறு சாதி என்பதால் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். மயானத்திற்கு பாதைக்கேட்டு மூதாட்டியின் சடலம் தூக்கிச்செல்லப்பட்ட பாடையை சூளகிரி - பேரிகைசாலை கூட்டுரோடு பகுதியில் வைத்து 100க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் இரு தரப்பிலும் பேசி பார்த்தனர். தங்கள் நிலைப்பாட்டில் இரு தரப்பினரும் உறுதியாக இருந்தனர்.

இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டியின் உறவுக்கார இளைஞர்கள் , சடலத்தை தூக்கிக் கொண்டு கிருஷ்ணகிரி சாலையை நோக்கிச்சென்றனர். தடுக்க முயன்ற போலீசாரை மீறி ஆவேசமாக தூக்கிச் சென்றனர்

பாடையை தூக்கிச்சென்ற இளைஞர்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்டதால் போலீசாரால் தடுக்க இயலவில்லை.

மூதாட்டியின் சடலத்துடன் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து இளைஞர்கள் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது

தொடந்து அங்கு வந்த டி.எஸ்.பி சங்கு தலைமையிலான போலீசார் இளைஞர்களை சமாதானப்படுத்த முயன்றனர். தங்களுக்கு அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாக இளைஞர்கள் அடங்க மறுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார், போலீசார் மூலம் அந்த மூதாட்டியின் சடலத்தை தூக்கிச்செல்லவைத்தார். சாலையோரமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. வருங்காலத்தில் மயானம் செல்ல நிலையான பாதை ஏற்படுத்தி தருவதாக போலீசார் உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக பெரும் பரபரப்பு நிலவியது


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement