செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

100ல் பறந்த காரை 110ல் சென்று மடக்கிய தீப்பொறி போலீசார்..! சினிமா பாணியில் ஒரு சேஸிங்

Jun 28, 2023 07:10:40 AM

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கார் மற்றும் 19 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பிய கொள்ளையர்களை, திருவண்ணாமலை போலீசார் பொலிரோ வாகனத்தில் சினிமா பாணியில் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர்.

மாருதி ஸ்விப்ட் காரை ... மின்னல் வேகத்தில் பொலிரோ போலீஸ் வாகனத்தில் விரட்டிச்செல்லும் இந்த அதிரடி சேஸிங் அரங்கேறிய இடம் திருவண்ணாமலை..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உறையூரை சேர்ந்தவர் வங்கி காசாளர் சசிக்குமார். கடந்த 22ந்தேதி இவரது குடும்பத்தினர் ஊருக்கு சென்றிருந்த நிலையில் , வீட்டின் முதல் தளத்தில் சசிக்குமார் படுத்து உறங்கியதை சாதகமாக்கிக் கொண்டு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள். பீரோவில் இருந்த 19 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த கார் சாவியை எடுத்துச்சென்று ஸ்விப்ட் டிசையர் காரையும் திருடிக் கொண்டு தப்பியதாக தெரிகிறது.

தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த கடலூர் மாவட்ட போலீசார் சென்னையில் இருவரை செவ்வாய்கிழமை கைது செய்தனர், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இருவர் காருடன் திருவண்ணாமலைக்கு தப்பிச்செல்வது தெரியவந்தது. உடனடியாக திருவண்ணாமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலையின் முக்கிய சாலைகளில் போலீசார் தயாராக நின்றிருந்தனர். அதிவேகத்தில் திருவண்ணாமலைக்குள் புகுந்த கொள்ளையர்களின் காரை , போலீசார் பொலிரோ ஜீப்பில் துரத்த ஆரம்பித்தனர்

திருவண்ணாமலை முக்கிய சாலை, கிரிவலப்பாதை, கடை வீதி என அந்த காரை போலீசார் சினிமா பாணியில் பரபரப்பாக விரட்டிச்சென்றனர்

சிக்னலில் மடக்கிப்பிடிக்க முயன்ற போலீசாருக்கு டிமிக்கிக் கொடுத்து விட்டு காரை திருப்பிச்சென்ற கொள்ளையர்களை பொலிரோ போலீசார் விடாமல் தீப்பொறியாய் துரத்திச்சென்றனர்

திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குணசேகரன் மற்றும் ரூரல் டிஎஸ்பி குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் கார் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் கொள்ளையர்களின் காரை , சேசிங் செய்தனர். சண்முகா பள்ளி அருகில் வரும்போது சுற்றி வளைத்து போலீசார் அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர்

கொள்ளையர்களுக்கு சொந்தமான கார் என்றால் , அதனை இடித்து தள்ளி எளிதாக போலீசார் மடக்கி இருப்பார்கள் என்றும் திருடப்பட்ட காரை சேதமில்லாமல் மீட்க முயன்றதாகவும், இறுதியில் சுற்றிவளைத்த போது காருக்குள் இருந்து வெளியே வர மறுத்ததால், காரின் பின் பக்க கண்ணாடி உடைந்து போனதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் சில இடங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாகவும் போலீசாரும் அவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுத்துச்சென்று மடக்கியதாக தெரிவித்த போலீசார், அவர்களிடம் இருந்த சுமார் 19 சவரனுக்கு மேல் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கார் மற்றும் நகைகளையும் , பிடிபட்ட இருவரையும், கடலூர் மாவட்ட போலீசாரிடம், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஒப்படைத்தார். கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement