செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் உடைமாற்றும் அறையில் செல்போன் காமிரா எப்படி..? போலீஸ் வெளியிட்ட தகவல்..!

Jun 27, 2023 09:59:53 AM

திருக்கோவிலூரில் உள்ள ரிலையன்ஸ் டிரெண்ட் கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் காமிரா செல்போனை மறைத்து வைத்திருந்த சம்பவத்தில் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்ப்பதற்கு மும்பை அலுவலகத்தின் அனுமதிக்காக போலீசார் காத்திருக்கின்றனர் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரின் மேல வீதியில் உள்ள ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் துணிக்கடைக்குப் போன இரண்டு பெண் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய ஆடை சரியாக உள்ளதா? என அணிந்துப் பார்க்க உடை மாற்றும் அறைக்கு சென்றுள்ளனர்.

அப்போது உடைமாற்றும் அறையில் ஏசி வரும் பாயிண்டில் காமிரா செல்போன் ஒன்று இருந்ததாக தெரிகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் இருவரும் அருகில் இருந்த பெண் ஊழியரிடம் விவரத்தை கூறியுள்ளனர்.

இதனை அடுத்து பெண் ஊழியர்கள் உடைமாற்றும் அறைக்கு சென்று அங்கு மேல் பகுதியில் ஏசி பாயிண்டில் இருந்த செல்போனை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் வாடிக்கையாளர், உடனடியாக உடைமாற்றும் அறைக்கு வந்து அந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு வெளியே சென்று விட்டு மீண்டும் கடைக்குள் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அந்த பெண்ணை கடையின் ஊழியர்கள் பிடித்து உடனடியாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த போலீசார் , செல்போனை பறித்துச் சென்ற பெண் வாடிக்கையாளரை அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று பெண் காவலர்கள் மூலமாக 25ஆம் தேதி இரவு விசாரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் இரண்டாவது நாளாக மீண்டும் அந்தப் பெண் வாடிக்கையாளர் மற்றும் கடை ஊழியர்களையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் கடையின் ஊழியர்கள் தெரிவித்தது போல் அந்த பெண் வாடிக்கையாளர், கடந்த 24 ஆம் தேதி இரவு அதே கடைக்கு துணி வாங்க வந்த போது, குறிப்பிட்ட அந்த உடை மாற்றும் அறையை பயன்படுத்தியதாகவும் , ஒரு வேளை தான் உடைமாற்றும் காட்சி அந்த செல்போனில் பதிவாகி இருக்க கூடுமோ என்ற அச்சத்தில் வாங்கிச்சென்று பார்த்ததும் தெரியவந்தது.

கடையின் ஊழியர்களோ முதலில் செல்போனில் மெமரி கார்டு இருந்ததாகவும் அதனை செல்போனை பறித்துச்சென்ற பெண் வாடிக்கையாளர் எடுத்ததாகவும் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து டிஎஸ்பி மனோஜ் குமார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. விரிவான சிசிடிவி காட்சிகளை கேட்ட போது மும்பையில் உள்ள தலைமை நிறுவனம் அனுமதித்தால் மட்டுமே தர இயலும் என்று ஊழியர்கள் மறுத்து விட்டதாக தெரிகிறது.

இன்னும் சில சிசிடிவி கேமரா காட்சிகள் கிடைத்தால் மட்டுமே, வாடிக்கையாளராக வந்த பெண் செல்போனை மறைத்து வைத்தாரா? அல்லது ஊழியர்கள் மறைத்து வைத்த காமிரா செல்போனா என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அந்த செல்போனில் இருந்த சிம்கார்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித பயன்பாட்டிலும் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement