செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

லைக் வாங்குவதற்காக கிணற்றில் குதித்து உயிரை விட்ட இளைஞர்…! கண்ணீரோடு தவிக்கும் குடும்பத்தினர்

Jun 26, 2023 08:24:33 AM

சமூகவலைத்தளத்தில் லைக் வாங்குவதற்காக திருவண்ணாமலையில் கிணற்றில் குதித்த இளைஞர் நீரில் மூழ்கிய நிலையில், தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி சுமார் 6 மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. சென்னை மாங்காட்டில் குடும்பத்தோடு தங்கியிருந்து கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் ஏழுமலைக்கு, சச்சின், சரண் ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

கிராமத்தில் நடைபெறும் குலதெய்வ விழாவிற்காக குடும்பத்தோடு சென்றார் ஏழுமலை. தனியார் மருந்து நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த சரண், தனது நண்பனான ரமேஷ் என்பவரையும் கரிப்பூருக்கு அழைத்து சென்றுள்ளார்.

சனிக்கிழமை மதிய நேரத்தில் ரமேஷை விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் சரண். அங்கிருந்த பெரிய கிணற்றை பார்த்ததும், தான் கிணற்றில் குதிப்பதை வீடியோவாக எடுக்குமாறு ரமேஷிடம் சரண் கூறியதாக சொல்லப்படுகிறது.

கிணற்றில் குதிப்பதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதிக லைக்குகளை வாங்கப் போகிறேன் என்று கூறி, உடைகளை களைந்து விட்டு உள்ளாடையோடு நீர் நிரம்பியிருந்த கிணற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் பதற்றத்திற்கு உள்ளான ரமேஷ் கூச்சலிட்டுள்ளார்.

பக்கத்து வயல்களில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்கள் அங்கு வந்து பார்த்த போது சரண் தண்ணீருக்குள் மூழ்கியிருந்ததால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை வெளியேற்றினால் தான் உடலை வெளியே எடுக்க முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 5 டீசல் என்ஜின்கள் மூலமாக சுமார் 6 மணி நேரமாக இறைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

கிணற்றின் உள்ளே இறங்கிய தீயணைப்புத் துறையினர், அடிப்பகுதியில் சிக்கியிருந்த உடலை கயிறு கட்டி மீட்டனர். சடலத்தை உடற்கூறாய்விற்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சேத்துப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தினர்.

முகம் தெரியாத சிலரிடமிருந்து லைக் பெறுவதற்காக விபரீதத்தில் சிக்கி குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்த வேண்டாமென போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement